Tue. Jul 7th, 2026 18:00:47
இலங்கை

சுற்றுலா மேம்பாட்டு நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

admin - June 17, 2026

சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்கள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Basil Rajapaksa பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) Colombo Fort Magistrate’s Court கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.