Tue. Jul 7th, 2026 18:00:02
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – ஜனாதிபதி

admin - June 23, 2026

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதோடு பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப புதிய சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை கட்டுப்படுத்துவதுடன், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களையும் உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.