Tue. Jul 7th, 2026 16:42:57
பிரதான செய்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று அழைப்பு!

admin - May 12, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்றையதினம்(12.5.2026) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கபில சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றை அடிப்படையாக வைத்து தான் மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கபில சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.