Tue. Jul 7th, 2026 16:45:00
இலங்கை

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது

admin - May 17, 2026

பாறுக் ஷிஹான்

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள்   போதைப்பொருட்களுடன் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏலவே குறித்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாக  போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதுடன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்  கைதானவர்கள் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் 40 கிராம் ஐஸ் மற்றும்  60 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைத்தொலைபேசிகள் என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து விசேட அதிரடிப்படையினர் மீட்டு சட்ட நடவடிக்கைக்கா நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.