கல்முனை வைத்தியசாலைக்கு ரூ. 7 கோடி பெறுமதி அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டது
பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன் (வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தலைமையில் அங்கு விஜயம் செய்தபோது, ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் மருத்துவர் பி. கலாநிதிவேந்தன் ஆகியோரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அம்பாறை […]
