Tue. Jul 7th, 2026 20:11:13

Category: இலங்கை

இலங்கை

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: ரதபவனிக்கான் முன்னாயத்த கலந்துரையாடல்

June 29, 2026

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: அக்கரைப்பற்று – பனங்காடு வழியாக ஜூலை 4ஆம் தேதி ரதபவனி. (செல்வி வினாயகமூர்த்தி) ஜீவசித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசையை முன்னிட்டு, காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசம் ஊடாக பனங்காடு வரை நடைபெறவுள்ள வெளியூர் ரதபவனிக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. கைலாயபிள்ளை தலைமையில், இந்துக் கலாசார அலுவல்கள் […]

இலங்கை

உகந்தையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் சிரமதான பணி.

June 29, 2026

செல்லையா பேரின்பராசா   மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உகந்தை முருகன் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு வருடாந்தம் மேற்கொள்ளப்படும்  சிரமதான பணியானது இவ்வருடமும் பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில்  இடம்பெற்றது.   இந்த சிரமதான நிகழ்வில் கணக்காளர் வ. நாகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர்  மு. கங்காதரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த உன்னதமான பணியை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை

முருக பக்தனா(நா)ய்  யாத்திரை செல்லும் சுப்பிரமணியன்- முழுவிபரமடங்கிய சிறப்பு கட்டுரை

June 28, 2026

கடந்த 36 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது  ஓர் அதிசய தெய்வீக நாய் சுப்ரமணியன். பாதயாத்திரை காவலனாக முருகசக்தி பெற்ற நாயாக திகழும் சுப்பிரமணி நேற்று(2 7)சனிக்கிழமை 37 வது நாள் சுப்பிரமணி ,  முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவு மண்ணுக்கு வந்திருக்கின்றது. இன்று உலகெங்கும் பேசுபோருளாக விளங்கும்  அற்புதமான அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் just அதிகமாகின்றது. பௌத்த பிக்குகளோடு வந்த “அலோக” என்ற நாய் எத்துணை வைரலானதோ, […]

இலங்கை

இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் மேலங்கி அறிமுகம்.

June 27, 2026

செல்லையா பேரின்பராசா  இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட மேலங்கி ( T-shirt ) அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை   (27.06.2026) கல்முனையில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் திருமாறன் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இத் தொழிற்சங்க ஆலோசகரும், கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின்  முன்னாள் பிரதம உள்ளக கணக்காய்வாளருமான எச் .எம் . றசீட், கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தொழிற்சங்க […]

இலங்கை

ஹரக் கட்டா’ இலஞ்ச வழக்கு: மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்!

June 27, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘ஹரக் கட்டா’வை பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண தொகுதி சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் அருண் ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் இருவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்து […]

இலங்கை

எல்லே கார்னிவல் மகளிர்  போட்டி இன்று ஆரம்பம்; நாளை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்!!

June 27, 2026

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு 2003 சாதாரண தர மற்றும் 2006 உயர்தர பழைய மாணவர் குழுவினரின் ஏற்பாட்டில், “ELLE Carnival Women’s Trophy 2026 – Season 02” எனும் மகளிர் எல்லே விளையாட்டுப் போட்டி இன்று 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை  28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் , காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாளை(28) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத் தலைவர் யூ.துஷான் தலைமையில் […]

இலங்கை

மகளிர் அமைப்பின்தலைவியாக சிவகெளரி.!

June 27, 2026

-அஸ்லம் – தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாக திருமதி சிவகௌரி (சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துள்ளதுடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர் ஆவார். தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக்களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர். தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் […]

இலங்கை

உப தலைவியாக தெரிவானார் சிபானியா.!

June 27, 2026

(அஸ்லம் எஸ்.மௌலானா) புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உப தலைவியாக எம்.எப். பெளசுல் சிபானிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் மகளிர அமைப்பின் அநுராதபுரம் மாவட்டத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் அன்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் அனைவரதும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று உப தலைவியானார். கலைப்பட்டதாரி ஆசிரியையான இவர்தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றவர். அந்திக்கரை என்ற மரபுக் கவிதை தொகுப்பினை அதற்கு சான்றாக சமர்பித்த சிறந்த கவிஞராவார். அத்தோடு முற்றத்து நிலா பாடல் என்ற […]

இலங்கை

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026”

June 26, 2026

மட்டக்களப்பு மாவட்ட , மக்கள் வங்கி பிராந்திய காரியாலயமும் , மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கி கிளைகளும் இணைந்து நடத்திய “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026” இன்று 26.06.2026 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திரு.K. கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.B. கோகுலராஜன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு. […]

இலங்கை

களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

June 26, 2026

(செல்வி வினாயகமூர்த்தி) நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக […]