Tue. Jul 7th, 2026 18:01:22

Category: கல்முனை

கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம் 

May 20, 2026

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை    ஆதார வைத்தியசாலையின்   பிரதிப் பணிப்பாளராக(DD)  கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர்  நேற்று,   டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார். யாழ் பல்கலைக்கழக  மருத்துவ  பட்டதாரியான  இவர்  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  அவர் […]

கல்முனை

நேற்று கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கோடீஸ்வரன் எம் பி விஜயம்!

May 19, 2026

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (18) திங்கள் கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் மற்றும்  வைத்தியசாலை குழுவினர் வரவேற்று கலந்துரையாடினர். பின்னர், வெளிநோயாளர் பிரிவு, நோயாளிகள் பல்வேறு வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவு, உயர் கவனிப்பு பிரிவு , சமையலறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள சேவைகள் மற்றும் நோயாளர்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இவ்விஜயத்தின் போது , […]

கல்முனை

மருதமுனை நகரசபை கோரிக்கை தொடர்பில் அவசர முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் – சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ்

May 18, 2026

நூருல் ஹுதா உமர் மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து தனி நகரசபையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மருதமுனைக்கான நகரசபை கோரிக்கையை முன்வைப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடியதாக அமையலாம். இவ்வாறான முக்கியமான சமூக மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பில், […]

கல்முனை

பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் மே18 முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு

May 18, 2026

பாறுக் ஷிஹான் தமிழர்களின் வலி நிறைந்த மே18 இன அழிப்பு நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் […]

கல்முனை

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – இன்று கல்முனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி. 

May 18, 2026

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும். இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன்  தெரிவித்தார்.  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் […]

கல்முனை

கல்முனையில் தமிழ் இளைஞர் சேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

May 17, 2026

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில், கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினரால் இன்று (17) கல்முனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் இளைஞர் சேனையின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

May 14, 2026

பாறுக் ஷிஹான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் தர முகாமைத்துவ […]

கல்முனை

தாதிய தினத்தில் சிறந்த சேவைக்கான பாராட்டை பெற்றனர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள்!

May 13, 2026

உலக தாதிய தினம் கல்முனை ஆதார  வைத்தியசாலையில் (12) கொண்டாடப்பட்டது.மேலும் ஒரு வார காலமாக பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது. இதில் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வுகள் யாவும் தாதிய பரிபாலகர் திரு சசிதரன் அவர்களின் முழு பொறுப்பிலும், தலைமையிலும் நடைபெற்றுள்ளது. நேற்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கலாநிதி சங்கரப்பிள்ளை சுஜேந்திரன்பேராசிரியர் ( சுகாதார விஞ்ஞானபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களும்,  […]

கல்முனை

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்!

May 9, 2026

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மய்யம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் […]

கல்முனை

சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! இன்று தீர்ப்பு வெளியானது : கல்முனைக்கும் சாய்ந்த மருதுக்கும் தனித்தனியாக தேர்தல்

May 7, 2026

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகரசபை என்பது சட்டரீதியானது எனவும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர, சாய்ந்தமருது நகர சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பாகியது. . கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று […]