காரைதீவில் கல்முனை வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி
( வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய கல்முனை வலய மட்ட போட்டிகள் நேற்று (23) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்றன. அங்குரார்ப்பண நிகழ்வு விபுலானந்தர் அரங்கிலே தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் யூஎல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது. அங்கு, அடுத்த வருடம் […]









