Tue. Jul 7th, 2026 20:12:54

Category: கல்முனை

கல்முனை

சிட்னி – சிலோன் லயன்ஸ் கழகத்தினர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க அன்பளிப்பு

May 31, 2026

( வி.ரி.சகாதேவராஜா) சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அன்பளிப்பு […]

கல்முனை

இளம் சீட்டுக்களின் ராகம் 2026 சிறப்பாக இடம் பெற்றது.

May 31, 2026

புத்த சாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம், மற்றும் கல்முனை சாஹரம் இசைக்குழு இணைந்து நடத்திய அம்பாறை மாவட்ட “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வானது. நேற்றைய தினம்(30) நட்பிட்டி முனை பொது மைதானத்தில். கோலாகலமாக இடம் பெற்றது. 15 வயதுக்குட்பட்ட 13 இளம் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தார்கள் முற்று முழுதாக சிறுவர்களை உள்ளடக்கிய. “இளம் சிட்டுகளின் ராகம் எனும் இன்னிசை பாடல் […]

கல்முனை

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்  – இன்று 31.05.2026 – சிறப்பு கட்டுரை – கேதீஸ்

May 31, 2026

-கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி யோகி ( காசிப்பிள்ளை சாமியார்) அவர்களின் ஜனன தினம் இன்றாகும். கல்முனையின் கருவறையாம் பாண்டிருப்பில் 1912 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31 ஆம் திகதி இளையதம்பிக்கும் பெரியபிள்ளைக்கும் மகனாக பிறந்தார்.இவருக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர் காசிப்பிள்ளை சிறுவயதில் தந்தையை இழந்ததால் […]

கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலக வைகாசி பௌர்ணமி கலை விழா விமர்சையாக நடைபெற்றது!

May 31, 2026

கல்முனை:கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய “வைகாசி மாத பௌர்ணமி கலை விழா – 2026” நிகழ்வு, கடந்த 30.05.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி. ஜே. அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சி நிரல் […]

கல்முனை

பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரின் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

May 30, 2026

செளவியதாசன் பௌத்த மதத்தின் முக்கிய புனித தினங்களில் ஒன்றான வெசாக் தினத்தை முன்னிட்டு, பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அழகிய வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு வர்ண வானவேடிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வருகை தரும் மக்களுக்காக ஐஸ்கிரீம் தன்சல் உள்ளிட்ட பல்வேறு தான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் […]

கல்முனை

வெசாக் தினங்களில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு – கல்முனை மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.!

May 29, 2026

👉 வெசாக் வாரத்தை முன்னிட்டு பொது நிருவாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மே மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய மூன்று தினங்களும் ஆடு, மாடு, கோழி என்பன அறுப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் விலங்கறுமனைகளும் நாளை முதல் குறித்த 03 […]

கல்முனை

பாண்டிருப்பு மகாவித்தியாலய நுழைவாயில் வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

May 29, 2026

பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு GCE O/L பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலையின் நுழைவாயிலில் புதிய வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பாடசாலையின் அழகியமைப்பையும் அடையாளப் பெருமையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியுதவியையும் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பழைய […]

கல்முனை

கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

May 28, 2026

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  இன்று   கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில்  கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும்  குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் […]

கல்முனை

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி உற்சவம் ஆரம்பம்!

May 25, 2026

கல்முனை:வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு கடற்கரைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் நடப்பு பரபாவ வருடத்திற்கான வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி மகோற்சவம், இன்று (25.05.2026) திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் பக்திப் பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து முதலாம் நாள் இரவுப் பூசையும், பாரம்பரிய வழக்குரைப்பாடல் பாடுதலும் ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் பிற்பகல் 1.00 மணிக்கு விசேட பூசைகளும், மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ சத்திய […]

கல்முனை

நற்பிட்டிமுனையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” இசை விழா மே 30ல் நடைபெறும்!

May 25, 2026

அம்பாறை மாவட்டத்தில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மத்திய கலாசார நிலையம் மற்றும் கல்முனை “சஹ்ரம்” இசைக்குழு இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன. இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் 30.05.2026 அன்று மாலை 6.00 மணிக்கு நற்பிட்டிமுனை பொதுமைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பல இளம் […]