Tue. Jul 7th, 2026 16:50:58

Category: பிரதான செய்தி

பிரதான செய்தி

நற்பெறுமானங்களை மீட்டெடுத்து புதிய இலங்கையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

June 29, 2026

பௌத்த மதத்துடன் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் தேரவாத பௌத்த பாரம்பரியம் நாட்டில் வேரூன்றியதுடன், அது மத வளர்ச்சியை மட்டுமன்றி கல்வி, கலாசாரம், கட்டிடக்கலை, நீர்ப்பாசனம், சிற்பக்கலை உள்ளிட்ட பல […]

பிரதான செய்தி

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

June 25, 2026

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும், போதைப்பொருள் வர்த்தகம், […]

பிரதான செய்தி

மற்றுமொரு ராஜபக்ச கைது!

June 25, 2026

இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான செய்தி

அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்த ராஜதந்திர மோதல்: ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!

June 19, 2026

​வாஷிங்டன், ஜூன் 19, 2026: ​அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), இஸ்ரேலிய அமைச்சரவைக்குக் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார். ​ஒப்பந்தம் ஏன் விமர்சிக்கப்படுகிறது? ஈரானின் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இது இஸ்ரேலின் தேசிய […]

பிரதான செய்தி

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு ஆரம்பம்

June 17, 2026

பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன. மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

பிரதான செய்தி

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் வரவேற்பு

June 15, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்தத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதுடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை உறுதியளித்துள்ளார். இந்த மோதலை […]

பிரதான செய்தி

தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றனர்!

June 15, 2026

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம். எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு […]

பிரதான செய்தி

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: கத்தார் மத்தியஸ்தக் குழு மீண்டும் டெஹ்ரானுக்கு பயணம்

June 14, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் நோக்கில், கத்தாரின் உயர்மட்ட மத்தியஸ்தக் குழு மீண்டும் ஈரான் தலைநகர் டெஹ்ரானை சென்றடைந்துள்ளது. ஈரானின் இஸ்னா (ISNA) செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியின் பிரத்தியேக ஆலோசகர் தலைமையிலான குழுவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, […]

பிரதான செய்தி

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு – இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை!

June 12, 2026

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளும் அதனுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் வரவேற்பு காணப்படுகிறது. குறித்த விசாரணைகளுக்கு சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டக்ஙளை செய்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீர்கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.