ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முன்னாள் இராணுவ மற்றும் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புடையிருக்கலாம் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, தாக்குதலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்pu பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைச் சேகரிக்க நான்கு முஸ்லிம் நபர்கள் அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]









