Tue. Jul 7th, 2026 18:01:40

Category: பிரதான செய்தி

பிரதான செய்தி

ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

June 10, 2026

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முன்னாள் இராணுவ மற்றும் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புடையிருக்கலாம் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, தாக்குதலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்pu பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைச் சேகரிக்க நான்கு முஸ்லிம் நபர்கள் அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

பிரதான செய்தி

அமெரிக்க ஹெலிகொப்டர் விவகாரம்: ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

June 10, 2026

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தகவலின்படி, நேற்று (09) மாலை 17:00 EST (BST இரவு 22:00) மணியளவில் இந்த இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. “ஈரானின் அத்துமீறலுக்கு […]

பிரதான செய்தி

ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் போர் அச்சம் மீண்டும் தீவிரம்!

June 8, 2026

ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை […]

பிரதான செய்தி

ஹொரணை முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

June 4, 2026

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அங்கு தங்கியிருந்த 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் […]

பிரதான செய்தி

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; குவைத் விமான நிலையம் தாக்குதலுக்கு இலக்கு

June 3, 2026

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் முதன்மை பயணிகள் முனையக் கட்டிடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் குவைத்திற்கும், குவைத்திலிருந்தும் இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது வானில் பயணித்துக் கொண்டிருந்த பல விமானங்கள் அருகிலுள்ள மாற்று விமான நிலையங்களுக்கு […]

பிரதான செய்தி

அமெரிக்க நன்கொடையாக வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள் இலங்கையை வந்தடைந்தன

June 2, 2026

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் செயல்திறன் மற்றும் நீண்டகால விமானச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த விமானத் தொகுதி, விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டை வந்தடைந்துள்ள ஹெலிக்கொப்டர்கள் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர், அவை […]

பிரதான செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் மறியல் நீக்கம்; உலக கப்பல் போக்குவரத்துக்கு டிரம்ப் வேண்டுகோள்!

May 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஹோர்முஸ் நீரிணையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடற்படை மறியல் “இப்போது நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கியமான வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு திசைகளிலும் கப்பல் போக்குவரத்து உடனடியாக எந்தத் தடையும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான செய்தி

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

May 29, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி Anura Kumara Dissanayake வியாழக்கிழமை (28) இரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசாங்க திணைக்களங்கள், […]

பிரதான செய்தி

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

May 26, 2026

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச இணைய அணுகலை மீண்டும் வழமையாக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதான செய்தி

இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

May 25, 2026

இந்தியா அரசாங்கம், இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய 134 கெப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பணியாளர்களுக்கும் அவர் […]