Tue. Jul 7th, 2026 18:01:24

Category: இலங்கை

இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக் கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமிக்கு பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டதாக […]

இலங்கை

எதிர்கால சுகாதாரச் சவால்களுக்கு திறமையான பணியாளர்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 3, 2026

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் தனது நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சேவைகளை வலுப்படுத்துவதிலும் தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் […]

இலங்கை

இயற்கை மருத்துவத்தின் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்கிறார் வைத்தியர் சுந்தரம் தில்லையம்பலம்

July 3, 2026

செல்லையா பேரின்பராசா  இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை எந்தவிதமான பக்க விளைவுகளும்  இன்றி இயற்கை வைத்தியத்தின் மூலமாக ஓரிரு நாட்களில் விரைவாக குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு. இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் காரைதீவைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியரும்,  ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான பாட ஆசிரியருமான சுந்தரம் தில்லையம்பலம். அண்மைய நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காச்சலுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையிலும்,  பலர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதையும் அவதானித்த பாரம்பரிய […]

இலங்கை

கல்முனை வலயத்திற்காக தங்கம் வென்று கார்மேல் பற்றிமா சாதனை!

July 3, 2026

கல்முனை வலயத்திற்குப் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! ​கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில் (Provincial Level Major Games 2026), கல்முனை வலயத்தில் தங்கம் வென்ற ஒரே ஒரு பாடசாலையாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர் ​வலயத்தின் பெருமையை மாகாண மட்டத்தில் நிலைநாட்டி, பெருமளவிலான பதக்கங்களைக் குவித்து அசத்திய எமது வீர, வீராங்கனைகளின் விபரம் இதோ: ​✨ தங்கப் பதக்கம் வென்றவர்கள் […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் செயலமர்வு

July 3, 2026

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கிலான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 2026 ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான இக் கலந்துரையாடலானது, கௌரவ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒத்துழைப்புடன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் வழிகாட்டலில் புதிய மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் […]

இலங்கை

நாவிதன்வெளி கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு நாளை 03.07.2026 வெளியீடு!

July 2, 2026

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பான ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு, நாளை (03.07.2026) வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு, நாவிதன்வெளி கற்பக விநாயகர் ஆலயத்தில் நண்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ கண. மாதவராஜா, பாட்லாசிரியர் விவேகவெளி தமிழேந்திரன் எனும் புனைப்பெயரை உடைய ச. நவவேந்திரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த இசைத்தட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பக்திப் பாடல்களும் முழுமையாக செயற்கை நுண்ணறிவு […]

இலங்கை

மண்முனை பாலத்தடியில்  வீதித்தடை அவசியமா? ஜனாதிபதிக்கு கமலநல குழுத் தலைவர் அகிலேஸ்வரன் தந்தி!

July 2, 2026

(வி.ரி. சகாதேவராஜா)  மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரிவில் உள்ள மண்முனை பாலத்தடியில் உள்ள போலீஸ் வீதித் தடை அவசியமா ? இதனை அகற்றித் தருமாறு  கொக்கொடிச்சோலை கிளாக்கொடிச்சேனை  கமநல அமைப்பின் தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான  சிவ.அகிலேஸ்வரன் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு அவசர நந்தியை அனுப்பியுள்ளார் . அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது..  தங்களின் அரசாங்கம் பதவியேற்ற உடன் நாட்டில் உள்ள சில வீதித் தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.  ஆனால் மண்முனை  பாலத்தடியில் உள்ள வீதித்தடை […]

இலங்கை

கல்முனை உவெஸ்லியில் மாபெரும் இரத்ததான முகாம்.

July 2, 2026

செல்லையா பேரின்பராசா கல்முனை மாநகரில் உள்ள புகழ்பூத்த கல்லூரியான கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 143 ஆவது ஸ்தாபகர் தினத்தின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இக் கல்லூரி அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் 02.07.2026 வியாழக் கிழமை காலை இடம்பெற்றது. ” ஒரு துளி இரத்தம் பல உயிர்களை வாழ வைக்கும் ” , ” வாருங்கள் இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் ” என்ற தொனிப்பொருள்களில் இடம்பெற்ற இந்த இரத்ததான […]

இலங்கை

வடக்கு, கிழக்கில் அசாதாரண வெப்பநிலை உயர்வு ஏற்படும் அபாயம்!

July 2, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் சுமார் 1.6 பாகை செல்சியஸாகவும், ஓகஸ்ட் மாத […]

இலங்கை

இன்று வேலோடுமலையிலிருந்து   அதிகாலையில் கதிர்காமம் ஆயிரம் வேல் பாதயாத்திரை ஆரம்பம்!

July 2, 2026

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய ஆயிரம் வேல் பாதயாத்திரை இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. வேலோடு மலை முருகன் ஆலய ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜா சுவாமிகள் தலைமையிலான 15 அடியார்கள்  வேல்சாமி மகேஸ்வரன் வழிகாட்டலில் மூன்றாவது வருட பாதயாத்திரையை விசேட  பூஜை சகிதம் ஆரம்பித்தனர். அவர்கள் நேராக சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்தையடைந்து  பின்னர் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தனர்.  […]