சர்வதேச யோகா தினம்: அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் 2,000 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
செல்வி வினாயக மூர்த்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இதன்போது யோகாசனப் பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன. […]









