Tue. Jul 7th, 2026 22:45:15

Category: இலங்கை

இலங்கை

சர்வதேச யோகா தினம்: அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் 2,000 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

June 21, 2026

செல்வி வினாயக மூர்த்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இதன்போது யோகாசனப் பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன. […]

இலங்கை

சாய்ந்தமருதில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

June 20, 2026

பாறுக் ஷிஹான் வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில்  இன்று(20)  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது , […]

இலங்கை

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தின நிகழ்வு!

June 20, 2026

-செல்லையா பேரின்பராஜா- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தினம் 20.06.2026 சனிக்கிழமை மட்டக்களப்பு அலுவலகத்தில் இம் முன்னணியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக தோழர் பத்மநாபாவின் உருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகல் விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தோழர் விமலன் உட்பட பலர் கலந்து கொண்டு […]

இலங்கை

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயம்; திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு!

June 20, 2026

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் ; அன்னையவளின் திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆனி திங்கள் சுக்கிரவாரம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் மிதுன லக்கினமும் கூடிய காலை 9.35 மணி முதல் 10.20 மணி வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் அன்னையவளின் திருப்பொன் உருக்கல் நிகழ்வு நடைபெறும். அன்னையவளின் பொன்னுருக்கலில் கலந்து கொள்வது பூர்வபுண்ணியமாகும். இத்தெய்வீக கைங்கர்யத்தில் நாமும் இயன்ற பங்களிப்பினை பொன் பொருளாக வழங்கி இறையருளை […]

இலங்கை

சிறப்புக்கட்டுரை – சம்மாந்துறை நீச்சல் தடாகம் மூடப்பட்டது; இளைஞர் எதிர்காலம் கேள்விக்குறியா? மின்மினி மின்ஹா)

June 18, 2026

(கட்டுரை – மின்மினி மின்ஹா) ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப் பார்ப்பது போதுமானது. அந்த வகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்குள் அமைந்துள்ள நீச்சல் தடாகம், இன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பயிற்சி மையமாகவும், குடும்பங்களின் ஓய்வு நேரச் […]

இலங்கை

நாளை (20) இ.கி.மிசன் மட்டு.மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா

June 18, 2026

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளை 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்நிகழ்வில், மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு பயணத்தையும் அதன் கல்வி மற்றும் சமூக சேவைகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் கடந்த […]

இலங்கை

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவ பெருவிழா – 2026

June 18, 2026

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவப் பெருவிழா 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகள்: 🔸 கொடியேற்றம்: 2026.06.17 (புதன்கிழமை)🔸 தீர்த்தோற்சவம்: 2026.06.22 (திங்கட்கிழமை) விழா நிகழ்ச்சிகள்: 🔹 2026.06.16 முதல் 2026.06.22 வரை தினமும் விசேட பூஜைகள், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா இடம்பெறும்.🔹 விழா நாட்களில் தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு அருளுரை நிகழ்ச்சியும் பகல் […]

இலங்கை

சுற்றுலா மேம்பாட்டு நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 17, 2026

சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்கள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Basil Rajapaksa பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) Colombo Fort Magistrate’s Court கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

June 17, 2026

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய  மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள்  நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து  மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த […]

இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

June 17, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது