Tue. Jul 7th, 2026 19:07:08

Category: கல்முனை

கல்முனை

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் கொள்வனவுக்கான உதவும் பொற்கரங்கள் நிதி உதவி

June 15, 2026

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் அவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், குறித்த நிதி நேற்று (14) பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு கன. வரதராஜன் மற்றும் […]

கல்முனை

மாகாண மட்டத்திற்கு தெரிவான கல்முனை வடக்கு ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து அணிகள்!

June 14, 2026

50வது தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட மட்ட கூடைப்பந்து போட்டிகள் 13.06.2026 அன்று கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் கல்முனை வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், அடுத்த கட்டப் போட்டிகளிலும் சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கல்முனை

36வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி: கல்முனை வடக்கு பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம்

June 14, 2026

36வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியின் அம்பாறை மாவட்ட மட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது. போட்டியில் திறமையுடன் பங்கேற்று இவ்வெற்றியைப் பெற்ற வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்கும் […]

கல்முனை

மிகச் சிறப்பாக நடைபெற்ற நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய கொடியேற்றம்

June 13, 2026

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிழாவை நடாத்தினார்கள். ஆலய பரிபாலன சபை தலைவர் கே.கனகராசா மற்றும் சபையினர் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை, 19 ஆம் தேதி பக்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், […]

கல்முனை

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக எந்திரி கதீஷன் ஞாயிறு மாலை பதவியேற்பு !

June 12, 2026

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் எந்திரி நடராஜா கதீஷன் நாளை மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்யவிருக்கிறார். கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் […]

கல்முனை

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம்.!

June 12, 2026

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரின் வர்த்தக கேந்திர மையமாக கருதப்படுகின்ற பொதுச் சந்தைத் தொகுதி வியாழக்கிழமை விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாக மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொழில்நுட்ப […]

கல்முனை

கல்முனை பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி

June 11, 2026

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான ‘அடிப்படை உயிர்காப்பு’ மற்றும் ‘முதலுதவி’ (Basic Life Support – BLS & First Aid) பயிற்சி நிகழ்ச்சி அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் […]

கல்முனை

நற்பிட்டிமுனை  அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்  சனியன்று ஆரம்பம்

June 10, 2026

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன. அதேவேளை, 19 ஆம் தேதி பத்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், 21 ஆம் தேதி சப்பரத் திருவிழாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சங்காபிஷேகம்  எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற […]

கல்முனை

34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்!

June 10, 2026

34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்! கல்வித் துறையில் 34 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்வியாளர் சாந்தகுமார் அவர்கள், இன்று (10.06.2026) தனது நீண்டகால கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார். ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் நேசரெத்தினம் அவர்களின் புதல்வரான சாந்தகுமார் அவர்கள், 1992 ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். அங்கு 2004 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் […]

கல்முனை

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை (08.06.2026) கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டு மறைந்த அதிபருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, கல்வித்துறைக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் அருட்சகோதரர் கலாநிதி […]