Tue. Jul 7th, 2026 18:01:22

Category: கல்முனை

கல்முனை

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

June 27, 2026

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின் அதிபர் திரு. ஏ.ஜி.எம். றிஷாத் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அதிபரின் அயராத முயற்சியும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க வழிநடாத்துதலுமே இந்தக் கனவை நனவாக்கியதன் பின்னணியாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம். பாடசாலை அதிபர் […]

கல்முனை

SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

June 23, 2026

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர் ​திரு. இ.இராசரெத்தினம்ஓய்வு நிலை அதிபர்SCSDO உப செயலாளர் திரு. சந்திரலிங்கம்கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், […]

கல்முனை

மருத்துவ நிபுணர் குமுதினி காலமானார்

June 22, 2026

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டமருத்துவ நிபுணர் திருமதி. குமுதினி துரைரத்தினம் இன்று ( 22/06/2026) காலமானார். அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். பூதவுடல் தற்போது கார்மெல் பற்றிமா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Dr. குமுதினி ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காகவும் பங்களித்து வந்தவர். சுனாமி நம் கரையோரங்களை தாக்கி அழித்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து நிவாரணம் வழங்குவதில் அல்லும் பகலும் முழுமூச்சுடன் செயல்பட்ட ஒரு துணிகரமான […]

கல்முனை

ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடிய பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய திருச்சடங்கு கும்மிப் பாடல் வெளியிடப்பட்டது!

June 22, 2026

வி.ரி.சகாதேவராஜா பெரியநீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய கும்மிப்பாடல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(19) ஆலய முன்றலில் ஆலய தலைவர் எஸ். குபேரன் தலைமையில்  நடைபெற்றது. . இசையின் மூலம் இறைவன் மீது தீவிரமான பக்தியை வெளிக்காட்டும் வகையில் அருள்மிகு பேச்சியம்மன் கும்மிப்பாடலாக இவ் இறுவெட்டு அமைந்துள்ளது.  இக் கும்மிப்பாடலு க்கான வரிகள் மற்றும் பாடலை கோபாலகிருஷ்ணன் கிருஸ்ணசௌறி பாடியுள்ளார்.  இவரோடு அழகு ததும்பும் பெண்குரலில் பாடகி கானக்குயில் ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடியுள்ளார். பாடகி ரிஷார்த்தகி தற்போது […]

கல்முனை

கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு

June 21, 2026

கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு பாறுக் ஷிஹான் இலங்கையின் கிழக்கு மாகாணம்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி  சந்தியில் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன் போது  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி […]

கல்முனை

கோலாகலமாக பெரியநீலாவணையில் கலாசார மையம் திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

June 20, 2026

செல்லையா பேரின்பராசா.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியநீலாவணையில் பதினொரு மில்லியன் ரூபாவில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 19.06.2026 கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்.சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் […]

கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வாயிற் கோபுர திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

June 18, 2026

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், பாண்டிருப்பு ஆலயத்தின் புதிய வாயிற் கோபுர திறப்பு விழா இன்று (2026.06.18) வியாழக்கிழமை மிகச் சிறப்பாகவும் பக்தி உணர்வுடன் கூடிய சூழலிலும் நடைபெற்றது. காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரையான சுப நேரத்தில் கோபுர தரிசன நிகழ்வும், அதனைத் தொடர்ந்து கோபுர கும்பாபிஷேக நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ்விழாவிற்கு ஆலயத்தின் தலைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்றார். ஆன்மிக அதிதிகளாக பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதம […]

கல்முனை

கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டு மையம் திறப்பு விழா (19) நாளை- கிழக்கு ஆளுநர் பிரதம அதிதி

June 18, 2026

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம்’ திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை 19 ஜூன் 2026 மாலை 4:30 மணிக்கு பெரியநீலாவணை, மத்திய வீதியில் அமைந்துள்ள குறித்த மையத்தில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார் அவர்கள் தலைமைதாங்கவுள்ள இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர […]

கல்முனை

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப்

June 17, 2026

பாறுக் ஷிஹான் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு […]

கல்முனை

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்!

June 15, 2026

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்! பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சம்பியனாக வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இவரின் இந்தப் பெறுபேறு பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. சாதனை படைத்த மாணவர் பரமேஸ்வரன் கவிசாநுக்கு மனமார்ந்த […]