Tue. Jul 7th, 2026 19:02:39

Author: admin

கல்முனை

கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

July 4, 2026

கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் அஹ்சன் மனாஸிர், வேலைகள் […]

இலங்கை

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

July 4, 2026

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறித்த திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (03) கல்முனை பிராந்திய […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்

July 3, 2026

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, பல்வேறு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைச் சவால்கள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்கு பதிலாக தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டிய […]

இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக் கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமிக்கு பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டதாக […]

இலங்கை

எதிர்கால சுகாதாரச் சவால்களுக்கு திறமையான பணியாளர்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 3, 2026

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் தனது நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சேவைகளை வலுப்படுத்துவதிலும் தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் […]

இலங்கை

இயற்கை மருத்துவத்தின் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்கிறார் வைத்தியர் சுந்தரம் தில்லையம்பலம்

July 3, 2026

செல்லையா பேரின்பராசா  இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை எந்தவிதமான பக்க விளைவுகளும்  இன்றி இயற்கை வைத்தியத்தின் மூலமாக ஓரிரு நாட்களில் விரைவாக குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு. இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் காரைதீவைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியரும்,  ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான பாட ஆசிரியருமான சுந்தரம் தில்லையம்பலம். அண்மைய நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காச்சலுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையிலும்,  பலர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதையும் அவதானித்த பாரம்பரிய […]

கல்முனை

சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

July 3, 2026

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் நிலைமைகளை ஆராய்ந்தபோது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை அவர் விடுத்துள்ளார். இதன்போது பூங்காவை மேலும் ஒளியூட்டும் வகையில் தேவையானளவு பிரகாசமான மின் விளக்குகளை உடனடியாக பொருத்துமாறும் மலசல கூடங்கள் மற்றும் நீர் வசதிகளை ஒழுங்குபடுத்தி, செயற்படுத்துமாறும் மின்சாரக் கட்டமைப்புகளில் காணப்படும் குளறுபடிகளை […]

இலங்கை

கல்முனை வலயத்திற்காக தங்கம் வென்று கார்மேல் பற்றிமா சாதனை!

July 3, 2026

கல்முனை வலயத்திற்குப் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! ​கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில் (Provincial Level Major Games 2026), கல்முனை வலயத்தில் தங்கம் வென்ற ஒரே ஒரு பாடசாலையாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர் ​வலயத்தின் பெருமையை மாகாண மட்டத்தில் நிலைநாட்டி, பெருமளவிலான பதக்கங்களைக் குவித்து அசத்திய எமது வீர, வீராங்கனைகளின் விபரம் இதோ: ​✨ தங்கப் பதக்கம் வென்றவர்கள் […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் செயலமர்வு

July 3, 2026

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கிலான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 2026 ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான இக் கலந்துரையாடலானது, கௌரவ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒத்துழைப்புடன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் வழிகாட்டலில் புதிய மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் […]

கல்முனை

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்!

July 2, 2026

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள திரு. எஸ்.சிறிதரன் அவர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் முன்னிலையில்உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிருவாக உத்தியோகத்தரை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாழ்த்தி வரவேற்றனர். […]