Tue. Jul 7th, 2026 20:03:17

Author: admin

இலங்கை

நாவிதன்வெளி கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு நாளை 03.07.2026 வெளியீடு!

July 2, 2026

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பான ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு, நாளை (03.07.2026) வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு, நாவிதன்வெளி கற்பக விநாயகர் ஆலயத்தில் நண்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ கண. மாதவராஜா, பாட்லாசிரியர் விவேகவெளி தமிழேந்திரன் எனும் புனைப்பெயரை உடைய ச. நவவேந்திரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த இசைத்தட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பக்திப் பாடல்களும் முழுமையாக செயற்கை நுண்ணறிவு […]

இலங்கை

மண்முனை பாலத்தடியில்  வீதித்தடை அவசியமா? ஜனாதிபதிக்கு கமலநல குழுத் தலைவர் அகிலேஸ்வரன் தந்தி!

July 2, 2026

(வி.ரி. சகாதேவராஜா)  மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரிவில் உள்ள மண்முனை பாலத்தடியில் உள்ள போலீஸ் வீதித் தடை அவசியமா ? இதனை அகற்றித் தருமாறு  கொக்கொடிச்சோலை கிளாக்கொடிச்சேனை  கமநல அமைப்பின் தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான  சிவ.அகிலேஸ்வரன் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு அவசர நந்தியை அனுப்பியுள்ளார் . அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது..  தங்களின் அரசாங்கம் பதவியேற்ற உடன் நாட்டில் உள்ள சில வீதித் தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.  ஆனால் மண்முனை  பாலத்தடியில் உள்ள வீதித்தடை […]

இலங்கை

கல்முனை உவெஸ்லியில் மாபெரும் இரத்ததான முகாம்.

July 2, 2026

செல்லையா பேரின்பராசா கல்முனை மாநகரில் உள்ள புகழ்பூத்த கல்லூரியான கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 143 ஆவது ஸ்தாபகர் தினத்தின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இக் கல்லூரி அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் 02.07.2026 வியாழக் கிழமை காலை இடம்பெற்றது. ” ஒரு துளி இரத்தம் பல உயிர்களை வாழ வைக்கும் ” , ” வாருங்கள் இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் ” என்ற தொனிப்பொருள்களில் இடம்பெற்ற இந்த இரத்ததான […]

இலங்கை

வடக்கு, கிழக்கில் அசாதாரண வெப்பநிலை உயர்வு ஏற்படும் அபாயம்!

July 2, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் சுமார் 1.6 பாகை செல்சியஸாகவும், ஓகஸ்ட் மாத […]

இலங்கை

இன்று வேலோடுமலையிலிருந்து   அதிகாலையில் கதிர்காமம் ஆயிரம் வேல் பாதயாத்திரை ஆரம்பம்!

July 2, 2026

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய ஆயிரம் வேல் பாதயாத்திரை இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. வேலோடு மலை முருகன் ஆலய ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜா சுவாமிகள் தலைமையிலான 15 அடியார்கள்  வேல்சாமி மகேஸ்வரன் வழிகாட்டலில் மூன்றாவது வருட பாதயாத்திரையை விசேட  பூஜை சகிதம் ஆரம்பித்தனர். அவர்கள் நேராக சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்தையடைந்து  பின்னர் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தனர்.  […]

இலங்கை

சுப்பிரமணிக்கு காட்டிற்குள் செல்ல தடை: வாகனத்தில் காட்டுப்பாதை முடிவு வரை செல்லும்!

July 1, 2026

சிறுத்தையால் சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்;காட்டுக்குள் சுப்பிரமணி செல்வதற்கு வாய்ப்பில்லை!வனஜீவராசிகள் திணைக்களம் அறிவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால் அது சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.எனவேகாட்டுக்குள் சுப்பிரமணியை கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார். சுப்பிரமணிக்கு காட்டுக்குள் செல்ல அனுமதி மறுப்பு என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து நாம் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய போது […]

இலங்கை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தின சிறப்பு நிகழ்வு

July 1, 2026

செல்லையா பேரின்பராசா.  கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் 01.07.2026  புதன்கிழமை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. உதயகுமார்  அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  மேற்படி நிகழ்வுகளை இரண்டாம் வருட  விஞ்ஞான கல்விநெறி ஆசிரிய மாணவன்  எ.எம்.சராப்தீன் முன்னிலைப்படுத்தினார். எளிய மனிதர்களின் ஆயுதம் கூட்டுறவு என்னும் காணொளி –  ஆங்கிலநெறி ஆசிரிய […]

இலங்கை

இன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ரோட்டரியின் மருத்துவ முகாம்   

July 1, 2026

( வி.ரி. சகாதேவராஜா) பட்டிருப்பு றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்திருந்த  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர் தலைமையில், பட்டிருப்பு றொட்டரி கழக தலைவர் ரோட்டரியன் நிறோசாந்  பங்குபற்றுதலுடன் இன்று (2026.07.01) புதன்கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல்  மண்டபத்தில் இடம்பெற்றது.   இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல் போன்றன இடம் பெற்றது.  இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட […]

இலங்கை

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் ஜூலை 4ஆம் திகதி

July 1, 2026

மட்/பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா மற்றும் நடைபவணியை முன்னிட்டு அனைத்து பழைய மாணவர்களுக்குமான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு விழா மற்றும் நடைபவணி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதால், அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், […]

இலங்கை

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு

July 1, 2026

பாறுக் ஷிஹான்அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal Ponni) அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரூ.100,000/= அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் […]