Tue. Jul 7th, 2026 21:14:50

Author: admin

இலங்கை

பாதயாத்திரிகர்களுக்கு வெற்றியின் கரங்கள் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

July 1, 2026

( வி.ரி.சகாதேவராஜா)  காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.  பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations Private Limited-இன் ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, ஒரு மனிதாபிமான சேவையை முன்னெடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை  மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின் முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த 130-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, […]

கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆனி மாத பௌர்ணமி கலை விழாநேற்று சிறப்பாக நடைபெற்றது!

July 1, 2026

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ஆனி மாத பௌர்ணமி கலை விழா – 2026 நேற்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ள கலை கலாசார மேம்பாட்டு மையத்தில் பிரதேச செயலாளர் திரு. ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதன்படி தமிழ் மொழி வாழ்த்து ,வரவேற்பு நடனம், பரதநாட்டியம் ,மயில் நடனம், பரதக் கலைநிகழ்ச்சிகள், குழு […]

இலங்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் பொறுப்பேற்பு!

July 1, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் கலாரஞ்சனி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அப்பதவிக்கான இடைக்கால ஏற்பாடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் இன்று (01) முதல் பதில் பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிலை சிகிச்சை நிலையங்களில் ஒன்றாக விளங்குவதுடன், தினசரி பல் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இதன் நிர்வாகப் பொறுப்பை இடைக்கால அடிப்படையில் வைத்திய […]

இலங்கை

பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

June 30, 2026

கதிர்காமம் பாதயாத்திரையின் 41ஆம் நாள்: பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது; மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு செல்வி வினாயகமூர்த்தி வரலாற்றுச்சிறப்பு மிக்க கதிர்காமம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரையின் 41ஆம் நாளான இன்று (30) செவ்வாய்கிழமை பாதயாத்திரை குழுவினர் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் மகா தேவஸ்தானத்தை வந்தடைந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கும், அவர்களுடன் பயணித்துவரும் ‘சுப்பிரமணியன்’ எனும் நாய்க்கும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், உபசரிப்புகளும் […]

இலங்கை

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

June 30, 2026

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் , மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் […]

கல்முனை

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டி: தேசிய மட்டத்துக்கு தெரிவான கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி!

June 30, 2026

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, மூன்றாம் இடத்தை (2nd Runner-up) பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம், கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய மட்டப் போட்டியில் […]

கல்முனை

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த உன்னத சேவைகளை நேரில் கண்டு வியந்து பாராட்டு!

June 29, 2026

( வி.ரி.சகாதேவராஜா)  சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தனா, கல்முனை ஆதார வைத்தியசாலையின்  சிறந்த சேவை, தூய்மை மற்றும் டிஜிட்டல் செயல்முறை மேம்பாடுகளை நேரில் கண்டு, வியந்து பாராட்டினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர். அசேல குணவர்த்தனா நேற்று முன்தினம்(28) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், விஜயம் செய்த  சுகாதார சேவைகள் பணிப்பாளர் […]

பிரதான செய்தி

நற்பெறுமானங்களை மீட்டெடுத்து புதிய இலங்கையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

June 29, 2026

பௌத்த மதத்துடன் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் தேரவாத பௌத்த பாரம்பரியம் நாட்டில் வேரூன்றியதுடன், அது மத வளர்ச்சியை மட்டுமன்றி கல்வி, கலாசாரம், கட்டிடக்கலை, நீர்ப்பாசனம், சிற்பக்கலை உள்ளிட்ட பல […]

இலங்கை

இன்று காலை நிந்தவூர் முருகன் ஆலயத்தில் பாதயாத்திரீகர்கள்

June 29, 2026

யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள் இன்று (29) திங்கள் கிழமை காலை , அண்மையில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிந்தவூர் முருகன் ஆலயத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது ஆலயத் தலைவர் இராம.ரவீந்திரதேவன் வரவேற்று காலை ஆகாரமளித்து வழிபடுவதை காணலாம். படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

இலங்கை

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: ரதபவனிக்கான் முன்னாயத்த கலந்துரையாடல்

June 29, 2026

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: அக்கரைப்பற்று – பனங்காடு வழியாக ஜூலை 4ஆம் தேதி ரதபவனி. (செல்வி வினாயகமூர்த்தி) ஜீவசித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசையை முன்னிட்டு, காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசம் ஊடாக பனங்காடு வரை நடைபெறவுள்ள வெளியூர் ரதபவனிக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. கைலாயபிள்ளை தலைமையில், இந்துக் கலாசார அலுவல்கள் […]