Tue. Jul 7th, 2026 22:28:48

Category: இலங்கை

இலங்கை

நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில்  வாழ்வாதார உதவிகள்- நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு!!

May 20, 2026

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு ​நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  பிரதேச சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின்கீழ், 2026ஆம் ஆண்டிற்கான நலன்புரி வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ​ இவ் […]

இலங்கை

திருக்கோவில் விநாயகபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருநாவுக்கரச நாயனார் குருபூசை விழா 

May 20, 2026

( வி.ரி.சகாதேவராஜா) ​விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும்  திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன  இணைந்து நடத்திய  பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா,  (17)ஞாயிற்றுக்கிழமைவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. முன்னதாக அப்பர் வேடம் தரித்த குழந்தைகள் சகிதம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் அரோஹரா கோஷம் முழங்க இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதான ஆன்மீக வழிபாடாக அமைந்த குருபூசையினை திரு ஆறுமுகம் கிருபாகர குருக்கள்  மிக பக்திபூர்வமாகவும், சாஸ்திர […]

இலங்கை

போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

May 19, 2026

பாறுக் ஷிஹான்போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (18)  அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திகாமடுல்ல  நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி,அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 […]

இலங்கை

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கோமாரி மயானத்தில் பாரிய சிரமதானம் 

May 19, 2026

( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கோமாரி மயானத்தில் பாரிய சிரமதானப் பணிகள் நேற்று (18) திங்கள் கிழமை முன்னெடுக்கப்பட்டன. பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில்,கோமாரி பிரதேச  உறுப்பினர் த. சுபோதரனின் வேண்டுகோளுக்கிணங்க  தவிசாளர் முஷரப்பின் வழிகாட்டுதலில் இந்த சிரமதானம் இடம்பெற்றது. இதன்போது பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கனரக வாகன உதவியுடன் கோமாரி மயானப் பகுதியை சுத்தம் செய்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். சிரமதான பணிகளை மேலதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். சுற்றுச்சூழல் […]

இலங்கை

தேசிய ரீதியில் சாதனைபடைத்த மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பு

May 19, 2026

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி அலுவலகப் பணியாளர் திரு. த. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டித் தொடரில் சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகப் பிரதிப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள் […]

இலங்கை

நாளை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!

May 19, 2026

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் […]

இலங்கை

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 18, 2026

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு…. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய தினம் (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.  இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூறும் வகையில் […]

இலங்கை

புதனன்று ஜனாதிபதி அனுர மட்டுநகர் விஜயம்- இலங்கையின் 2 வது பெரிய நூலகத்தை திறக்கிறார்!

May 18, 2026

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  நாளை மறுநாள்  20 ஆம் திகதி புதன்கிழமை  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் […]

இலங்கை

காரைதீவில் திருக்குளிர்ச்சிச் சடங்குக் காலம் புனித வாரமாகும்- திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கருத்து!!

May 18, 2026

(  வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச்  சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்   என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனைக்  கூட்டத்தின் போது கருத்துரைக்கப்பட்டது . குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டமும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(15) ஆலய கேட்போர் கூடத்தில் தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் ஆகியோர் […]

இலங்கை

ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு மலர் வெளியீடும், நினைவஞ்சலியும்தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது

May 18, 2026

செல்லையா பேரின்பராசா  சமீபத்தில் காலம் சென்ற கிழக்கின் ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கான நினைவஞ்சலியும் , அவர் பற்றிய நினைவு மலர் வெளியீடும் ,நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது . சிரேஷ்ட ஊடகவியலாளரும், சலீமின் சிஷ்யனுமான,  ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசாவின் தொடக்கவுரையியில் ஆரம்பமான இந்  நிகழ்வில் அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர். இந் நிகழ்வு தலைநகர் கொழும்புபின் தமிழ்ச் சங்கத்தில் – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்ல்  சனிக்கிழமை 16.05.2026 […]