September 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர்

​திரு. இ.இராசரெத்தினம்
ஓய்வு நிலை அதிபர்
SCSDO உப செயலாளர்

திரு. சந்திரலிங்கம்
கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், முன்னை நாள் யோகாசன பொதனாசிரியர் (10வருடங்கள்) இந்திய கலாசார நிலையம், கொழும்பு. யோகப் பயிற்சி, விவேகானந்தா கேந்திரா யோக ஆராய்ச்சி நிலையம் பெங்களூர், இந்தியா
ஓய்வு நிலை அதிபர் மற்றும் காணி விசேட மத்தியஸ்த சபை உறுப்பினர்.
யோகா தின வளவாளர்.

திரு. எஸ். நிழல்வேந்தன்
அபி பாம் உரிமையாளர்
நற்பிட்டிமுனை

​திரு. அ. கமலநாதன்
உதவி கிளை முகாமையாளர்
AGRO MEMONDO GROUP OF COMPANY
பாண்டிருப்பு

திரு.தே.ரமணன்
​உரிமையாளர்
White Moon Hotel
பாண்டிருப்பு

திரு. கி. இலிங்கேஸ்வரன்
முகாமைத்துவ பணிப்பாளர்
SEIKO LANKA PRIVATE LIMITED
பாண்டிருப்பு

சு.அரசரெட்ணம் – ஓய்வு நிலை முகாமையாளர், இலங்கை வங்கி, கல்முனை.
எழுத்தாளர்

நிர்மலா தம்பிராசா
ஓய்வு நிலை ஆசிரியர்.

.

உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்டனர். பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு அதிதிகள் கௌரவிப்பும் இடம்பெற்றன.

நிகழ்வை கல்முனை கிளை தலைவி ஜெனிதா மோகன் , செயலாளர் கலாதேவி சந்திரகுமார், உப தலைவர் காந்தரூபன் உப செயலாளர் இராஜரெட்ணம் உட்பட நிருவாகத்தினர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

கலிபோர்னியா அமெரிக்காவில் வசிக்கும் திரு.திருக்கேதீஸ் குருசாமி அவர்கள் அமைப்பின் நிறுவுனர் இந்த நிகழ்வை வழிநடத்தியிருந்தார்.