Blog Post

Kalmunai Net > 2026 > May

சிட்னி – சிலோன் லயன்ஸ் கழகத்தினர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க அன்பளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அன்பளிப்பு […]

Read More

கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!

(வி.ரி.சகாதேவராஜா)சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று பிரபல சமய சொற்பொழிவாளர் எஸ். ஹரன்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்று பெருமை பேசும் நாங்கள், எங்களுடைய கலாசாரத்திலும் பண்பாட்டிலும் சைவ விழுமியத்திலும் ஆலயங்களில் இடம்பெறும் கேளிக்கைக் கும்மாளங்களை அனுமதிக்கக் கூடாது. DJ Remix எனும் […]

Read More

இளம் சீட்டுக்களின் ராகம் 2026 சிறப்பாக இடம் பெற்றது.

புத்த சாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம், மற்றும் கல்முனை சாஹரம் இசைக்குழு இணைந்து நடத்திய அம்பாறை மாவட்ட “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வானது. நேற்றைய தினம்(30) நட்பிட்டி முனை பொது மைதானத்தில். கோலாகலமாக இடம் பெற்றது. 15 வயதுக்குட்பட்ட 13 இளம் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தார்கள் முற்று முழுதாக சிறுவர்களை உள்ளடக்கிய. “இளம் சிட்டுகளின் ராகம் எனும் இன்னிசை பாடல் […]

Read More

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்  – இன்று 31.05.2026 – சிறப்பு கட்டுரை – கேதீஸ்

-கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி யோகி ( காசிப்பிள்ளை சாமியார்) அவர்களின் ஜனன தினம் இன்றாகும். கல்முனையின் கருவறையாம் பாண்டிருப்பில் 1912 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31 ஆம் திகதி இளையதம்பிக்கும் பெரியபிள்ளைக்கும் மகனாக பிறந்தார்.இவருக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர் காசிப்பிள்ளை சிறுவயதில் தந்தையை இழந்ததால் […]

Read More

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய ஊர்காவல் நிகழ்வு

செல்லையா பேரின்பராசா வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் விசேட நிகழ்வுகளில் ஒன்றான ஊர்காவல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இவ் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு க.ஜமுனாகரன் உதவி பூசகர் த.சசிகரன் ஆகியோர் ஊர்காவல் நிகழ்வு பூசைகளை நடாத்தினர், இந் நிகழ்வில் பல கலாசார நடனங்களும் இடம்பெற்றது.

Read More

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம் – வி.ரி.சகாதேவராஜா

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை கட்டல்” எனப்படும் மரபுச் சடங்கு காணப்படுகிறது. பச்சை கட்டல் என்பது பொதுவாக கண்ணகி அம்மன் சடங்கு நாட்களில் இடம்பெறும் ஒரு நேர்த்தி மற்றும் பகிர்வு சார்ந்த சடங்காகும்.  மேலும், பச்சைக் கட்டல் நிகழ்வு என்பது குறிப்பாக காரைதீவு கண்ணகையம்மன் ஆலயத்தில் சிறப்பாக 5 […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக வைகாசி பௌர்ணமி கலை விழா விமர்சையாக நடைபெற்றது!

கல்முனை:கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய “வைகாசி மாத பௌர்ணமி கலை விழா – 2026” நிகழ்வு, கடந்த 30.05.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி. ஜே. அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சி நிரல் […]

Read More

நள்ளிரவு (30) முதல் அமுல்: எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு

இன்று (30.05.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 […]

Read More

பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரின் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

செளவியதாசன் பௌத்த மதத்தின் முக்கிய புனித தினங்களில் ஒன்றான வெசாக் தினத்தை முன்னிட்டு, பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அழகிய வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு வர்ண வானவேடிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வருகை தரும் மக்களுக்காக ஐஸ்கிரீம் தன்சல் உள்ளிட்ட பல்வேறு தான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் […]

Read More

மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை கைது: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் உள்ளது என கூறி போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி, குழந்தைகளை வைத்து யாசகம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் […]

Read More