Blog Post

Kalmunai Net > 2026 > May

இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

இந்தியா அரசாங்கம், இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய 134 கெப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பணியாளர்களுக்கும் அவர் […]

Read More

சந்நிதியில் நடந்தது என்ன? பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

  (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிகநீண்ட பாதயாத்திரையின்  நேற்றைய முதல் நாள்(24) பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது . அதனால் காலை 9:00 மணிக்கு  புறப்பட வேண்டிய இப் புனித பாதயாத்திரை 12:00 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட நேர்ந்தது . இது தொடர்பாக கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் […]

Read More

காரைதீவின் முதல் மருத்துவர் பரஞ்சோதி லண்டனில் காலமானார்!

( வி.ரி. சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த பழம் பெரும் தமிழ்க் கிராமமான காரைதீவின், முதல் மருத்துவர் டாக்டர் செல்லத்துரை  பரஞ்சோதி லண்டனில் நேற்று(24) தனது 80  ஆவது வயதில் காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காரைதீவின் முதலாவது வைத்திய கலாநிதியும், புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முதலாவது வைத்தியருமான டாக்டர் செல்லத்துரை பரஞ்சோதி நேற்று லண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட தந்தி இலாகா பரிசோதகரும் […]

Read More

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த்mதிருச்சடங்கு வைபவம் இன்று ஆரம்பம்!

செல்லையா பேரின்பராசா  வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கு வைபவம் இன்றிரவு செவ்வாய்க் கிழமை (26.05.2026) இடம்பெறும் திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 02.06.2026 செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்த்தி பாடல் மற்றும் பொங்கல் வைபவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது. இத் திருச்சடங்கு வைபவத்தின் விசேட நிகழ்வுகளான அம்மனின் ஊர்க்காவல் வைபவம் மற்றும் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வுகள் என்பன முறையே 29.05.2026 வெள்ளிக் கிழமையும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெறவுள்ளது. […]

Read More

செய்திக்கு பலன் கிடைத்தது

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது.இச்செய்தியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும்.தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் […]

Read More

டிக்கோயா இரட்டை கொலை: சந்தேகநபர் தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு – வயோதிப தம்பதியினரின் உடல் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம்

ஹட்டன் டிக்கோயா நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி அளித்த இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) வயோதிப தம்பதியினர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொதுமக்களின் தகவலின் பேரில் சனிக்கிழமை (23) மாலை கைது […]

Read More

கைதானார் விமல் வீரவச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More

நற்பிட்டிமுனையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” இசை விழா மே 30ல் நடைபெறும்!

அம்பாறை மாவட்டத்தில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மத்திய கலாசார நிலையம் மற்றும் கல்முனை “சஹ்ரம்” இசைக்குழு இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன. இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் 30.05.2026 அன்று மாலை 6.00 மணிக்கு நற்பிட்டிமுனை பொதுமைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பல இளம் […]

Read More

வித்தியா கொலை வழக்கு தண்டனை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 46 வயதுடைய பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More