Blog Post

Kalmunai Net > 2026 > May

காப்பியநாயகி  கற்புக்கரசி கண்ணகைத்தாயின்  வைகாசி திருச்சடங்கு – கட்டுரை – வி. ரி. சகாதேவராஜா

காப்பியநாயகி  கற்புக்கரசி கண்ணகைத்தாயின்  வைகாசி திருச்சடங்கு வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை.   கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்டும். நாளை (25) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது. ( சில இடங்களில் நாள்கள் மாறுபடலாம்)  வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து, பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து, சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் […]

Read More

சிடாஸ்-கனடா அமைப்பின் 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும் ஒன்றுகூடலும் செப்டம்பரில்!

கிழக்கு இலங்கைச் சிறுவர் அபிவிருத்திச் சங்கத்தின் (ChiDAES-Canada) 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழா வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, கனடா நோர்த் யார்க்கில் (North York) அமைந்துள்ள ‘சர்ச் ஒப் செயின்ட் ஸ்டீபன்’ (Church of St. Stephen – 2259 Jane Street, North York, ON M3M 1A6) மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” […]

Read More

அமெரிக்கா மீண்டும் தாக்குதலுக்கு தயாரா? மேற்கு வான்வெளியை மூடிய ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், ஈரான் தனது நாட்டின் மேற்குப் பகுதி வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள NOTAM அறிவிப்பின் படி, மேற்கு வான் எல்லை வழியாகச் செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Read More

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெறும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை சந்தித்த அமைச்சர் சந்திரசேகரன்

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. K. சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்திற்கு, அமைச்சர் S. சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் S. ரஜீவன் ஆகியோர் இன்று (23) மாலை நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், ஆறுதலும் தெரிவித்தனர்.

Read More

கத்தாரில் TVK சார்பில் தமிழ் மாணவர்கள் கௌரவிப்பு விழா – முதல்வர் விஜயின் சகோதரி பல்லவி சிறப்பு பங்கேற்பு!

கத்தாரில் வாழும் தமிழர்களின் உற்சாக பங்கேற்புடன், தமிழக வெற்றிக் கழகம் – கத்தார் (TVK QATAR) ஏற்பாடு செய்த “UYARAM – 2026 கல்வி விருது விழா” சிறப்பாக நடைபெற்றது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தமிழ் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதேவேளை, “தளபதி வெற்றி கொண்டாட்டம்” எனும் கலைநிகழ்ச்சியும் விமரிசையாக இடம்பெற்றது. தமிழக […]

Read More

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் போதை ஒழிப்பு பேரணி

நூருல் ஹுதா உமர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி இன்று (23) கல்முனையில் நடைபெற்றது. “போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை […]

Read More

மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவான மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை பகுதியில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் நோய் பரவி வருவதாகவும், […]

Read More

சமூக ஊடக நிதி மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி போலி லொத்தர் பரிசுகள், உடனடி கடன் வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதாக கூறி பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுகமில்லாத இணைப்புகளை திறப்பது, பலவீனமான கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் வங்கி தொடர்பான தனிப்பட்ட தகவல்களை பிறருடன் […]

Read More

பொத்துவில் கனகர் கிராமத்தில் பொதுக்கிணறு மக்கள் பாவனைக்கு கையளிப்பு : கனடா வெஸ்டன் தமிழர் சங்கம் நிதியுதவி!

​பொத்துவில்: பொத்துவில் மீள்குடியேற்ற கிராமமான கனகர் கிராமத்தில், அங்கு வாழும் மக்களின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் கிணறு ஒன்று உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. ‘வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா’ அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக் கிணறு, இன்று (23.05.2026) திறந்து வைக்கப்பட்டது. ​பொத்துவில் கனகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. S. செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், கனகர் கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளர் திரு. T. ராஜேந்திரன், […]

Read More

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த கலை மன்றத்தின் 24 ஆவது வருட தமிழ் திறன் போட்டிகள்

(  வி.ரி.சகாதேவராஜா) கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம்  தனது 24 வது வருடாந்த தமிழ்த்திறன் போட்டிகளை கடந்த 17 ஆம் திகதி ஸ்காபரோ சிவிக் நிலையத்தில் தலைவர் சுதேசன் பத்மநாதன்  தலைமையில் நடாத்தியது. வழமைக்கு மாறாக இம் முறை அதிகூடிய 138 மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றமை  ஒரு சாதனையாகும். பேச்சு, திருக்குறள், பண்ணிசை, ஆத்திச்சூடி ,கொன்றை வேந்தன்,  சொல்வதெழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  இந்த வரலாறு படைத்த போட்டி நிகழ்ச்சியில்  பங்கு பற்றிச் சிறப்பித்து வெற்றி […]

Read More