Tue. Jul 7th, 2026 22:28:41

Author: admin

இலங்கை

களுதாவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் உணர்வு பூர்வ நிகழ்வு

May 17, 2026

களுதாவளை பொது மக்கள் ஏற்பாடு செய்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று 18 இடம் பெற்றது,

இலங்கை

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது

May 17, 2026

பாறுக் ஷிஹான்ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள்   போதைப்பொருட்களுடன் கைதாகினர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் […]

பிரதான செய்தி

சோமாலியக் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரம் : உலக கடல்வழிப் பாதுகாப்பில் பதற்றம்

May 17, 2026

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.குறிப்பாக சோமாலியக் கடற்கரைப் பகுதிகளில் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களிலேயே பல கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.சோமாலியக் கடற்கரை மற்றும் சோமாலியப் படுகைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த அபாய நிலையை அடுத்து, […]

இலங்கை

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு

May 17, 2026

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருவாளர் ஏ.சி.மகவந்த தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. நாவிதன்வெளி அன்னமலை பிரதான வீதியில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு […]

இலங்கை

அன்னையர் தின நிகழ்வில் மேடையேறிய பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் 

May 16, 2026

அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது மேடையேறிய பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள்…  படங்கள். வி.ரி.சகாதேவராஜா

இலங்கை

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வு -கஞ்சி விநியோகம்!!

May 14, 2026

  (  வி.ரி.சகாதேவராஜா) தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (13) புதன்கிழமை மாலை காரைதீவிலும் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச  சபை தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில்   பிரதேச சபைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழ் […]

இலங்கை

இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனஅஞ்சலி!

May 14, 2026

இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனஅஞ்சலி! ( வி.ரி.சகாதேவராஜா) ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு இன்று (14)    வியாழக்கிழமை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அவர் […]

பிரதான செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா பயணமானார்!-

May 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நேற்று (12) பிற்பகல் பீஜிங் நோக்கிப் பயணமானார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக விவகாரங்கள் குறித்து முதன்மையாகப் பேசப்படவுள்ள போதிலும், தாம் ஈரான் விவகாரம் தொடர்பில் சீனத் தலைவருடன் ஒரு “நீண்ட கலந்துரையாடலை” (long talk) மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் அணுவாயுதம் இருப்பதைத் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்த அவர், […]

இலங்கை

உகந்தமலை முருகனாலயத்தில் மே 19 இல் பாலஸ்தாபனம் – இவ்வருடம் கொடியேற்றம், திருவிழா,தீர்த்தம் இல்லை !!

May 14, 2026

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள் மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இம்முறை நடைபெறமாட்டாது என்று ஆலய வண்ணக்கர் எம்டி. சுதுநிலமே திசாநாயக்க(சுதா)  தெரிவித்தார். எனினும், கதிர்காமத்தோடு ஒத்த ஆடிவேல் விழா உற்சவ காலத்தில்(15-29) பாலஸ்தாபனம் செய்த கூடத்தில் சாதாரண பூஜைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் […]

கல்முனை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

May 14, 2026

பாறுக் ஷிஹான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் தர முகாமைத்துவ […]