Blog Post

Kalmunai Net > Articles by: admin

ஹோர்முஸ் நீரிணையை தாமதியாது திறவுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் வலியுறுத்தல்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையாளர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் வலியுறுத்தியுள்ளார். அமைதியான காலங்களில் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், ஈரான் நாடு இந்த கடல் பகுதியை நடைமுறையில் மூடியுள்ளதால், உலகளாவிய விநியோக சங்கிலியில் பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேச சந்தையில் எரிசக்தி […]

Read More

மருதமுனை நகரசபை கோரிக்கை தொடர்பில் அவசர முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் – சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ்

நூருல் ஹுதா உமர் மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து தனி நகரசபையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மருதமுனைக்கான நகரசபை கோரிக்கையை முன்வைப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடியதாக அமையலாம். இவ்வாறான முக்கியமான சமூக மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பில், […]

Read More

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு…. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய தினம் (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.  இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூறும் வகையில் […]

Read More

புதனன்று ஜனாதிபதி அனுர மட்டுநகர் விஜயம்- இலங்கையின் 2 வது பெரிய நூலகத்தை திறக்கிறார்!

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  நாளை மறுநாள்  20 ஆம் திகதி புதன்கிழமை  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் […]

Read More

பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் மே18 முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான் தமிழர்களின் வலி நிறைந்த மே18 இன அழிப்பு நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் பரிதாபமாக கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் […]

Read More

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – இன்று கல்முனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி. 

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும். இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன்  தெரிவித்தார்.  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் […]

Read More

காரைதீவில் திருக்குளிர்ச்சிச் சடங்குக் காலம் புனித வாரமாகும்- திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கருத்து!!

(  வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச்  சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்   என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனைக்  கூட்டத்தின் போது கருத்துரைக்கப்பட்டது . குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டமும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(15) ஆலய கேட்போர் கூடத்தில் தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் ஆகியோர் […]

Read More

ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு மலர் வெளியீடும், நினைவஞ்சலியும்தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது

செல்லையா பேரின்பராசா  சமீபத்தில் காலம் சென்ற கிழக்கின் ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கான நினைவஞ்சலியும் , அவர் பற்றிய நினைவு மலர் வெளியீடும் ,நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது . சிரேஷ்ட ஊடகவியலாளரும், சலீமின் சிஷ்யனுமான,  ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசாவின் தொடக்கவுரையியில் ஆரம்பமான இந்  நிகழ்வில் அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர். இந் நிகழ்வு தலைநகர் கொழும்புபின் தமிழ்ச் சங்கத்தில் – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்ல்  சனிக்கிழமை 16.05.2026 […]

Read More

கல்முனையில் தமிழ் இளைஞர் சேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில், கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினரால் இன்று (17) கல்முனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் இளைஞர் சேனையின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பாறுக் ஷிஹான்தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. சனிக்கிழமை (16) மாலை   முள்ளிவாய்க்கால் கஞ்சி இங்கு  வழங்கி வைக்கப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் […]

Read More