Blog Post

Kalmunai Net > Articles by: admin

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!

​​அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ​கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ​​அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது. ​இதனையடுத்து, முறையான நேர்முகப் பரீட்சையின் மூலம் புதிய பணிப்பாளர் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் […]

Read More

தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு!

​தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு! ​நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை (மே 22) தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ​தலங்கம காவல் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ​பின்னணி என்ன? ​கடந்த மே 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினர் போர்வீரர் […]

Read More

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ‘Mein Schiff 6’ சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் சிறப்பம்சங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள்: கப்பலில் வந்திறங்கிய பயணிகளுக்குக் கொழும்புத் துறைமுகத்தில் உற்சாகமான கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன: துறைமுக அதிகார சபையின் கருத்து:“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாகச் சுற்றுலாத்துறை சவால்களைச் சந்தித்த […]

Read More

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியம்

பாறுக் ஷிஹான கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்கா செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன. மேலும் குறித்த […]

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை(20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் […]

Read More

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பாவனைக்கு தடை: மே 31 முதல் அமுல்

​கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. ​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ​தடையின் முக்கிய விபரங்கள்: ​சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக, […]

Read More

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா?

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா? மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது. இது வெறும் போக்குவரத்துத் தடை மட்டுமல்ல, உலகளாவிய உணவு விநியோகக் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பாரிய சரிவின் தொடக்கம் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது. அடுத்த 6 – 12 மாதங்கள் மிக முக்கியமானவை FAO-வின் தலைமைப் […]

Read More

சர்வதேச நிலைமை : எரிபொருள் விலையை குறைக்க வாய்ப்பில்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிபொருள் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதேவேளை, இலங்கையில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருப்பதுடன், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.இந்த தகவல்களை கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.உலகளாவிய யுத்த சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வடைந்துள்ள போதிலும், மாதாந்திர விலை திருத்த நடைமுறையைத் தவிர […]

Read More

யாழ் – கதிர்காம நீண்ட பாதயாத்திரை  ஆரம்பம் – சனியன்று சந்நிதியிலிருந்து சம்பிரதாய பூர்வமாக புறப்படும்!!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19)  செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக  ஆரம்பமானது . ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை,  மூத்த முருக பக்தர் துரைச்சாமி அடியார் வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு  பிரான்பற்று  பெரிய வளவு  முருகன் ஆலயத்திலிருந்து 45 அடியார்களுடன் ஆரம்பமானது . அன்றிரவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தனர்.  நேற்று(20) புதன்கிழமை மாவிட்ட புரம் ஊடாக மயிலிட்டி பேச்சியம்மன்  ஆலயத்தை வந்தடைந்தனர் . இன்று […]

Read More

🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் உருவமும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் களவு சம்பவங்கள் அதிகரித்து […]

Read More