Tue. Jul 7th, 2026 20:03:17

Author: admin

பிரதான செய்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று அழைப்பு!

May 12, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்றையதினம்(12.5.2026) விசாரணைக்கு அழைத்துள்ளனர். கபில சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றை அடிப்படையாக வைத்து தான் மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போது உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கபில சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை […]

இலங்கை

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்

May 12, 2026

பாறுக் ஷிஹான்ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான […]

இலங்கை

எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும்

May 11, 2026

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (12) மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் […]

இலங்கை

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

May 11, 2026

பாறுக் ஷிஹான் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பிராந்திய மேற்பார்வை பொதுச் […]

இலங்கை

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா!

May 11, 2026

( மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு   மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது . பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர […]

இலங்கை

அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

May 11, 2026

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், லாகுகலை பியதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரிருக்கான இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் […]

இலங்கை

சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.

May 11, 2026

கே.எஸ். கிலசன் மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு விழா இன்றையதினம் மட்டக்களப்பு தமிழ் சங்க மண்ணபத்தில் நடைபெற்றது. சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவபண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமுன்னிலை அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் அவர்களும், முன்னிலை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட இந்துநாகரீகத்துறை பேராசிரியர் வ.குணபாலசிங்கம் மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை […]

இலங்கை

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு மாட்டியது

May 10, 2026

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில்  இடம்பெற்ற  சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு   சந்தேக நபர்களையும்   அம்பாறை மாவட்ட […]

இலங்கை

துறைநீலாவணையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சித்திரை குதூகலம்.

May 10, 2026

செல்லையா பேரின்பராசா  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ்  துறைநீலாவணையில் இயங்கும்அறநெறிப் பாடசாலைகள்  , ஆலயங்கள் இணைந்து நடாத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரை  கதூகலம் நிகழ்வு 10.05.2026 துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய முற்றத்தில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜயந்தா அரங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் […]

இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பி வைத்துள்ள கடிதம்

May 10, 2026

10 மே 2026மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய்முதலமைச்சர் – தமிழ் நாடுமாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை! நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுநிற்கின்றோம்.சிறீலங்கா […]