September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும்

எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (12) மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, 20 மாவட்டங்களுக் சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.