Tue. Jul 7th, 2026 20:11:25

Category: இலங்கை

இலங்கை

திருக்கோவில் பிரதேசத்தில் தெய்வீக சேவைத்திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குடுத்தும் வேலைத்திட்டம்!

May 12, 2026

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களின் ஆவணங்களின் ஒழுங்கு படுத்தும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஆலய ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் பாதுகாத்தல் தொடர்பான விடயங்களை மாவட்ட […]

இலங்கை

சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது!

May 12, 2026

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கும் விழா” 2025ஆம் ஆண்டிற்கான நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையிலான தர முகாமைத்துவம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 30.04.2026 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் ஆர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. “ஒவ்வொரு சிசுவுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான […]

இலங்கை

வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கிரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது

May 12, 2026

-தி.சதீஸ்- வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டியில் முதலாமிடம் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு துறைநீலாவணை ம.வி அணியினர் தெரிவானார்கள், அவ்வாறே கிரிக்கட் போட்டியிலும் முதலிடம் பெற்று சம்பியனாகியுள்ளது.உடற்கல்வி ஆசிரியர் றபி அஷாம் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் முரளிகிருஷ்ணா ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் இந்த வெற்றியை பதிவுசெய்தனர்.

இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்; தம்பிலுவில் சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!!

May 12, 2026

( வி.ரி.சகாதேவராஜா) தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  இன்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட   உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று (12) செவ்வாய்க்கிழமை   திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கு கஞ்சி காய்ச்சி முன்னாலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டை யில் […]

இலங்கை

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்

May 12, 2026

பாறுக் ஷிஹான்ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான […]

இலங்கை

எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும்

May 11, 2026

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (12) மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் […]

இலங்கை

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

May 11, 2026

பாறுக் ஷிஹான் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பிராந்திய மேற்பார்வை பொதுச் […]

இலங்கை

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா!

May 11, 2026

( மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு   மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது . பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர […]

இலங்கை

அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

May 11, 2026

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், லாகுகலை பியதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரிருக்கான இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் […]

இலங்கை

சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.

May 11, 2026

கே.எஸ். கிலசன் மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு விழா இன்றையதினம் மட்டக்களப்பு தமிழ் சங்க மண்ணபத்தில் நடைபெற்றது. சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவபண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமுன்னிலை அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் அவர்களும், முன்னிலை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட இந்துநாகரீகத்துறை பேராசிரியர் வ.குணபாலசிங்கம் மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை […]