Tue. Jul 7th, 2026 19:07:09

Category: இலங்கை

இலங்கை

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு மாட்டியது

May 10, 2026

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில்  இடம்பெற்ற  சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு   சந்தேக நபர்களையும்   அம்பாறை மாவட்ட […]

இலங்கை

துறைநீலாவணையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சித்திரை குதூகலம்.

May 10, 2026

செல்லையா பேரின்பராசா  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ்  துறைநீலாவணையில் இயங்கும்அறநெறிப் பாடசாலைகள்  , ஆலயங்கள் இணைந்து நடாத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரை  கதூகலம் நிகழ்வு 10.05.2026 துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய முற்றத்தில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜயந்தா அரங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் […]

இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பி வைத்துள்ள கடிதம்

May 10, 2026

10 மே 2026மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய்முதலமைச்சர் – தமிழ் நாடுமாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை! நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுநிற்கின்றோம்.சிறீலங்கா […]

இலங்கை

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்- சஞ்சீவி சிவகுமாரின் ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” உட்பட நான்கு நூல்கள் தேர்வு

May 10, 2026

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும்,  அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு  நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.  கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் […]

இலங்கை

ஞாயிறன்று மட்டக்களப்பில் “அம்மாவை வணங்குவோம்” அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி 

May 9, 2026

( வி.ரி.சகாதேவராஜா) அன்னை  லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு துளசி மண்டபம், மட்டக்களப்பு கல்லடியில் நடைபெறவுள்ளது.  சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் […]

இலங்கை

கனகர் கிராமத்தில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது

May 9, 2026

பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்ற மக்களுக்கான பொதுக் கிணறு ஒன்றை அமைக்கும் பணியில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் பூர்த்தியாகாத நிலையில் முக்கியமாக நீருக்கான தட்டுப்பாடு பிரதானமாக காணப்பட்டது. அதனை நிவர்த்திக்கும் வகையில் கனகர் கிராம மக்கள் பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அங்கு மக்களுக்கு பெரிதும் […]

இலங்கை

சமூக செயற்பாட்டாளர் விசு கனடா BRAC அமைப்பில் இணைப்பு

May 9, 2026

( வி.ரி. சகாதேவராஜா)  பிரபல சமூக செயற்பாட்டாளரும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவருமான  விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை  BRAC அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான குழுவில்  இணைக்கப்பட்டுள்ளார் என BRAC தலைவர் குரியன் பிரக்கணம் அறிவித்துள்ளார். திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவராக அறியப்படுகிறார்.  தனது சமூகத்தில் உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும் அவர், சமூக ஒற்றுமை, மக்கள் பங்கேற்பு மற்றும் […]

இலங்கை

கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு!

May 9, 2026

( காரைதீவு  வேதசகா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர். இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார். […]

இலங்கை

46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் -10.05.2026

May 9, 2026

( வி.ரி. சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு  10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி […]

இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மரணம் : இவர் முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்சம் வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்

May 8, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக கபில சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டின் பேரில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்தது. ஸ்ரீலங்கன் […]