Blog Post

Kalmunai Net > Articles by: admin

மீண்டும் சாதனை: வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்த்த JKMO கராத்தே வீரர்கள்!

விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அம்பாறை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 06.06.2026 அன்று அம்பாறை உள்ளக விளையாட்டு அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற JKMO கராத்தே சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். வெற்றிப் பதக்க விபரம் 🥇 2 தங்கப் பதக்கங்கள்🥈 3 வெள்ளிப் பதக்கங்கள்🥉 6 […]

Read More

எட்டாம் சடங்கு என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன? என்பது பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கம் தருகிறார். எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது.  இது ஆலயத்தின் சமய, […]

Read More

பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை: திங்கட்கிழமைக் கூட்டங்களைத் தவிர்க்க பிரதேச செயலாளர்கள் முடிவு

நாளை (08) முதல் பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடியாகவும் இணைய வழியிலும் கூட்டங்கள் நடத்தப்படுவதால், பிரதேச செயலகங்களின் அன்றாட சேவைகள் பாதிக்கப்படுவதோடு, சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிர்வாக சுற்றறிக்கை […]

Read More

பட்டிருப்பு கல்வி வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடம்

செல்லையா பேரின்பராசா. பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் -2026  இருநூற்று ஐம்பத்து ஆறு  புள்ளிகளைப் பெற்று (256 புள்ளிகள்) இவ்வாண்டும் மட் /பட்/களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. இதற்கான வெற்றிக் கிண்ணத்தை இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த மெய்லல்லுனர் திறனாய்வு போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் […]

Read More

விவசாயிகளுக்கு நற்செய்தி: ஹெக்டேயருக்கு வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாவாக உயர்வு

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்த அவர், இதுவரை 25,000 ரூபாவாக வழங்கப்பட்ட மானியம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிய மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரே தடவையில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த யால பருவத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தத் […]

Read More

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர் கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் கருப்பைக் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள், நோயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், ஆபத்துக் காரணிகள், நோயைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. கருப்பைக் கழுத்து புற்றுநோயை ஆரம்ப […]

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்-   “ஒஸ்கார்” பொருளாளர் கணேசநாதன் அறிவிப்பு !!

( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய  “ஒஸ்கார்” பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் தெரிவித்தார். அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி ஏழாம் கிராமம் நாமகள் வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து […]

Read More

2026 கதிர்காம காட்டுப்பாதை யூலை 10 இல் திறக்கப்படும்!

(  வி.ரி.சகாதேவராஜா) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில், மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அக் கூட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சமூக அமைப்பினர் உள்ளிட்ட சிலர் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். எனினும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பான திகதி குறித்து இவர்களது கருத்து […]

Read More

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04) […]

Read More

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி ) சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து […]

Read More