Blog Post

Kalmunai Net > Articles by: admin

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு- இருவர் கைது

பாறுக் ஷிஹான் டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(5) முதல் திங்கட்கிழமை(8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கையின் போது  தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை […]

Read More

மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று வலயம் முதல் இடம்

(ஷனா) கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று முதல் நிலை வலயமாக தெரிவாகியுள்ளது.அதேவேளை, மூன்று இடங்களைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், இரண்டு இடங்களைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் தலா ஒவ்வொரு இடங்களைப் பெற்று திருக்கோவில் மற்றும் கிண்ணியா கல்வி வலயங்கள் நான்காம் நிலையைப் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் 23ம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட […]

Read More

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13ஆம் திகதி ஆரம்பம்

மட்டக்களப்பு – களுதாவளையில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. உற்சவம் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. திருவிழா நாட்களில் கூட்டுப் பிரார்த்தனை, மேளவாத்தியக் கச்சேரி, சமய நிகழ்ச்சிகள், ஸ்தாபனாபிஷேகம், வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, ஜூன் […]

Read More

சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி

பாறுக் ஷிஹான் பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஒரு வருட நிறைவினை முன்னிட்டும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக செயற்படும் ஐ.எல்.எம். மாஹிர் தொடர்பிலான செயற்பாடுகளையும் முன்னிறுத்தி சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பினை சம்மாந்துறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை(9) […]

Read More

ஈஸ்டர் தாக்குதல் சதியில் சுரேஷ் சலே தொடர்பு: போதுமான ஆதாரங்கள் உள்ளன – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முன்னாள் இராணுவ மற்றும் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புடையிருக்கலாம் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, தாக்குதலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்pu பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைச் சேகரிக்க நான்கு முஸ்லிம் நபர்கள் அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

Read More

நற்பிட்டிமுனை  அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்  சனியன்று ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன. அதேவேளை, 19 ஆம் தேதி பத்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், 21 ஆம் தேதி சப்பரத் திருவிழாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சங்காபிஷேகம்  எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற […]

Read More

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.

செல்லையா பேரின்பராசா  உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் ஆண்டுதோறும்  யூன் 06 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை புதன்கிழமை காலை நடைபெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் கிருஷ்ணன் வரதராஜா அதிதி பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் […]

Read More

அமெரிக்க ஹெலிகொப்டர் விவகாரம்: ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தகவலின்படி, நேற்று (09) மாலை 17:00 EST (BST இரவு 22:00) மணியளவில் இந்த இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. “ஈரானின் அத்துமீறலுக்கு […]

Read More

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் மகோற்சவ தீமிதிப்பு வைபவம் ஆரம்பம் 

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவம் மற்றும்  தீமிதிப்பு வைபவம் இன்று புதன்கிழமை (10) காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயபிரதமபூசகர் கி.சரவணபவா தலைமையில் நடைபெறவுள்ள மகோற்சவம், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்புவைபவத்துடன்  நிறைவுபெறவுள்ளதென ஆலயதலைவர் கலாபூசணம் எஸ்..இராமநாதன் தெரிவித்தார். ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனியும் , 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முத்துச்சப்பற ஊர்வலமும் […]

Read More

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84)இ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்

Read More