Blog Post

Kalmunai Net > Articles by: admin

சுற்றுலா மேம்பாட்டு நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்கள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Basil Rajapaksa பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) Colombo Fort Magistrate’s Court கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read More

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய  மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள்  நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து  மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த […]

Read More

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப்

பாறுக் ஷிஹான் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு […]

Read More

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு ஆரம்பம்

பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன. மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

Read More

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் வரவேற்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்தத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதுடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை உறுதியளித்துள்ளார். இந்த மோதலை […]

Read More

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் ரகு ஜனுகேஷ் இரண்டாம் இடம் (1st Runner -up)

பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் ரகு ஜனுகேஷ், 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் (1st Runner-up) பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி, மாணவரின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாது, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது. சாதனை படைத்த மாணவன் ரகு ஜனுகேஷ்க்கு […]

Read More

தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றனர்!

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம். எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு […]

Read More

துறைநீலாவணையில் கரகக் கலை அரங்கேற்று விழா.

செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணை கண்ணகி கலைக்கழகம்,  யுனைட்டெட் விளையாட்டுக் கழகம்,  மற்றும் கண்ணகி இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய ” சத்தியவான் சாவித்திரி ” எனும் கரகக் கலைஅரங்கேற்று விழா துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட களரியில் 13.06.2026 மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக இவ் விழாவுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ,  துறைநீலாவணை  மண்ணின் மைந்தர்களான […]

Read More

அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!

(  வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த  69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு ஒன்று   (12) வெள்ளிக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டி  நாவலர் சனசமூக நிலைய மண்டபத்தில் முதன் முறையாக உணர்வு பூர்வமாக  நடைபெற்றது. 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக புதிய வளத்தாப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் அதன் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான […]

Read More