September 5, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர் ​திரு. இ.இராசரெத்தினம்ஓய்வு நிலை அதிபர்SCSDO உப செயலாளர் திரு. சந்திரலிங்கம்கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், […]

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – ஜனாதிபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதோடு பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப புதிய […]

Read More

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.!

(அஸ்லம்) தலைநகரில் தனிச் சிறப்புடன் இயங்கும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் 2026-2027 ஆம் ஆண்டுகளுக் கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் ஞாயிறன்று (21) அதன் நிறுவுனர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது. கொழும்பு-13 புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்வருவோர் நிர்வாகிகளாக நியமனம் பெற்றனர். தலைவி: திருமதி சிவகெளரி (சுடரி) உபதலைவி: திருமதி ஷிபானியா செயலாளர் : திருமதி தமிழ்செல்வி (தென்றல்) உப செயலாளர்: திருமதி […]

Read More

கதிர்காம காட்டுப் பாதை திறப்பில் மாற்றமில்லை – அன்னதானம் வழங்க கட்டுப்பாடு!

ஊடகங்களுக்கு கதவடைப்பு (வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப் பாதை திறப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பதில் மாற்றமில்லை. அதேவேளை, உகந்த மலையில் இருந்து குமுக்கன் செல்லும் வழியில் அன்னதானம் தயாரித்து வழங்க தடை. தேவையானால் உகந்தயில் சமைத்து ஓரிரு மணி நேரத்தில் கொண்டு சென்று வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை காட்டுப்பாதை தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (17.06.2026). புதன்கிழமை லாஹூகல பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க […]

Read More

மருத்துவ நிபுணர் குமுதினி காலமானார்

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டமருத்துவ நிபுணர் திருமதி. குமுதினி துரைரத்தினம் இன்று ( 22/06/2026) காலமானார். அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். பூதவுடல் தற்போது கார்மெல் பற்றிமா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Dr. குமுதினி ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காகவும் பங்களித்து வந்தவர். சுனாமி நம் கரையோரங்களை தாக்கி அழித்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து நிவாரணம் வழங்குவதில் அல்லும் பகலும் முழுமூச்சுடன் செயல்பட்ட ஒரு துணிகரமான […]

Read More

ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடிய பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய திருச்சடங்கு கும்மிப் பாடல் வெளியிடப்பட்டது!

வி.ரி.சகாதேவராஜா பெரியநீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய கும்மிப்பாடல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(19) ஆலய முன்றலில் ஆலய தலைவர் எஸ். குபேரன் தலைமையில்  நடைபெற்றது. . இசையின் மூலம் இறைவன் மீது தீவிரமான பக்தியை வெளிக்காட்டும் வகையில் அருள்மிகு பேச்சியம்மன் கும்மிப்பாடலாக இவ் இறுவெட்டு அமைந்துள்ளது.  இக் கும்மிப்பாடலு க்கான வரிகள் மற்றும் பாடலை கோபாலகிருஷ்ணன் கிருஸ்ணசௌறி பாடியுள்ளார்.  இவரோடு அழகு ததும்பும் பெண்குரலில் பாடகி கானக்குயில் ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடியுள்ளார். பாடகி ரிஷார்த்தகி தற்போது […]

Read More

கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றது

ஏ.எல்.எம்.ஷினாஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளர் சார்பில் மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.நிமலரன்ஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வ மத கலாசார பாரம்பரிய நிகழ்வுகளோடு அதிதிகள் மட்டக்களப்பு பிரதான நகரில் […]

Read More

காரைதீவில் தியாகிகள் தின நிகழ்வு- ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் நடைபெற்றது

( வி.ரி.சகாதேவராஜா) ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு  விவேகானந்தா விளையாட்டுக் கழகம்  நேற்று  (21) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தியது. காரைதீவில் உணர்வு பூர்வமாக நடந்த தியாகிகள் தினத்தில்  தோழர் பத்மநாபா மற்றும் உயிர் நீத்த தோழர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர். காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் […]

Read More

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி itf;fg;l;lJ குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடங்கப்பட்ட இந் நிகழ்வு 18.06.2026 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ச.ரகுலநாயகி தலைமையில் பிரதேசசெயலாக முன்றலில் நடைப்பெற்றது. .இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளரும் உகனை பிரதேச செயலக பதில் கணக்காளருமாகிய திரு .கமறுத்தீன் […]

Read More

சர்வதேச யோகா தினம்: அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் 2,000 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

செல்வி வினாயக மூர்த்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இதன்போது யோகாசனப் பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன. […]

Read More