இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின் அதிபர் திரு. ஏ.ஜி.எம். றிஷாத் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அதிபரின் அயராத முயற்சியும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க வழிநடாத்துதலுமே இந்தக் கனவை நனவாக்கியதன் பின்னணியாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம். பாடசாலை அதிபர் […]