Blog Post

Kalmunai Net > 2026 > May

🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் உருவமும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் களவு சம்பவங்கள் அதிகரித்து […]

Read More

அக்கரைப்பற்றில் நள்ளிரவு பரபரப்பு!சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி இருவர் ஆபத்தான நிலையில் அனுமதி

அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு சிறுவர்கள் காரை அதிவேகமாக செலுத்திய நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக […]

Read More

உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடர் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கோரிக்கை…!!

செல்லையா பேரின்ப ராசா  கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது அவசர தேவைக்காக இடர்கால கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.  அரச உத்தியோகத்தர்களின் இடர் தேவைகளை கருத்திற் கொண்டு மிகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் தொகையினை அரசு வழங்குகிறது. அதி உச்சமாக ரூபா 250,000/- ஆக இருந்த தொகை நாணய பெறுமதி இறக்கத்தை கவனத்திற் கொண்டு ரூபா 400,000/- உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட […]

Read More

நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில்  வாழ்வாதார உதவிகள்- நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு!!

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு ​நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  பிரதேச சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின்கீழ், 2026ஆம் ஆண்டிற்கான நலன்புரி வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ​ இவ் […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம் 

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை    ஆதார வைத்தியசாலையின்   பிரதிப் பணிப்பாளராக(DD)  கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர்  நேற்று,   டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார். யாழ் பல்கலைக்கழக  மருத்துவ  பட்டதாரியான  இவர்  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  அவர் […]

Read More

திருக்கோவில் விநாயகபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருநாவுக்கரச நாயனார் குருபூசை விழா 

( வி.ரி.சகாதேவராஜா) ​விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும்  திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன  இணைந்து நடத்திய  பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா,  (17)ஞாயிற்றுக்கிழமைவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. முன்னதாக அப்பர் வேடம் தரித்த குழந்தைகள் சகிதம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் அரோஹரா கோஷம் முழங்க இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதான ஆன்மீக வழிபாடாக அமைந்த குருபூசையினை திரு ஆறுமுகம் கிருபாகர குருக்கள்  மிக பக்திபூர்வமாகவும், சாஸ்திர […]

Read More

போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான்போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (18)  அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திகாமடுல்ல  நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி,அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 […]

Read More

நேற்று கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கோடீஸ்வரன் எம் பி விஜயம்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (18) திங்கள் கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் மற்றும்  வைத்தியசாலை குழுவினர் வரவேற்று கலந்துரையாடினர். பின்னர், வெளிநோயாளர் பிரிவு, நோயாளிகள் பல்வேறு வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவு, உயர் கவனிப்பு பிரிவு , சமையலறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள சேவைகள் மற்றும் நோயாளர்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இவ்விஜயத்தின் போது , […]

Read More

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கோமாரி மயானத்தில் பாரிய சிரமதானம் 

( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கோமாரி மயானத்தில் பாரிய சிரமதானப் பணிகள் நேற்று (18) திங்கள் கிழமை முன்னெடுக்கப்பட்டன. பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில்,கோமாரி பிரதேச  உறுப்பினர் த. சுபோதரனின் வேண்டுகோளுக்கிணங்க  தவிசாளர் முஷரப்பின் வழிகாட்டுதலில் இந்த சிரமதானம் இடம்பெற்றது. இதன்போது பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கனரக வாகன உதவியுடன் கோமாரி மயானப் பகுதியை சுத்தம் செய்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். சிரமதான பணிகளை மேலதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். சுற்றுச்சூழல் […]

Read More

தேசிய ரீதியில் சாதனைபடைத்த மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி அலுவலகப் பணியாளர் திரு. த. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டித் தொடரில் சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகப் பிரதிப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள் […]

Read More