🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!
நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் உருவமும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் களவு சம்பவங்கள் அதிகரித்து […]