Blog Post

Kalmunai Net > 2026 > June

பிரித்தானியாவில் குடியேற்ற நடவடிக்கை தீவிரம்: சிறுவர்களும் வெளியேற்றப் பட்டியலில்

பிரித்தானியாவில் சட்டபூர்வமாக வசித்து வரும் 5 வயதுடைய குழந்தைகள் உள்ளிட்ட பல சிறுவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. � பராமரிப்பு (Care Worker) துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சில குடும்பங்கள் பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வருவதுடன், பெற்றோரில் ஒருவருக்கு இன்னும் செல்லுபடியாகும் விசாவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. � 2024 ஆம் […]

Read More

அமெரிக்க நன்கொடையாக வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள் இலங்கையை வந்தடைந்தன

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் செயல்திறன் மற்றும் நீண்டகால விமானச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த விமானத் தொகுதி, விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டை வந்தடைந்துள்ள ஹெலிக்கொப்டர்கள் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர், அவை […]

Read More

உரும்பிராய் கிராமத்தின் வரலாற்று நூல் – செம்பாட்டுச் சீமை வெளியீட்டு விழா 

செல்லையா பேரின்பராசா  . உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் தொடக்க உரை ஆற்றி நூலை வெளியிட்டு வைத்தார் .  […]

Read More

எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சு தேவையான ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டார். எபோலா தொற்று பதிவாகியுள்ள ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான […]

Read More

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பு ஆதார வைத்தியசாலை ஆலய புனரமைப்புக்கு பங்களிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆலய நிருவாகத்தினரும், அபிவிருத்திக் குழுவினரும் பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதி உதவிகளை கோரி வருகின்றனர். இவ்வாறு கிடைக்கும் நிதியின் ஊடாக ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வைத்தியசாலை குழுவினரால் கல்முனை பிராந்திய இணையம் – கனடா […]

Read More

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய நடைமுறை அமல்

அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 31ஆம் திகதி முதல் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குதல் […]

Read More