Blog Post

Kalmunai Net > 2026

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்- சஞ்சீவி சிவகுமாரின் ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” உட்பட நான்கு நூல்கள் தேர்வு

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும்,  அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு  நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.  கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் […]

Read More

முதலமைச்சராக சற்று முன் விஜய் பதவியேற்றார்

கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.  இதனடிப்படையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

Read More

மின்சாரக் கட்டணம் 18% உயர்வு:

மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: நாளை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமல்!….2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளை முன்னிட்டு, வீட்டு பயன்பாட்டில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து விளக்கமளித்த ஆணைக்குழு, அரசாங்கம் 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த கட்டண உயர்வு மொத்த மின் நுகர்வோரில் […]

Read More

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மய்யம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் […]

Read More

ஞாயிறன்று மட்டக்களப்பில் “அம்மாவை வணங்குவோம்” அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி 

( வி.ரி.சகாதேவராஜா) அன்னை  லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு துளசி மண்டபம், மட்டக்களப்பு கல்லடியில் நடைபெறவுள்ளது.  சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் […]

Read More

விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவுளைப்பெற்றார் – 120

சற்று முன் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட தவெகவின் தலைவர் விஜய் திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.  ஆளுநர் சந்திப்பிற்கான நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் 118 என்பதை தாண்டி 120 இடங்களை பெற்றுள்ள தவெக மற்றும் ஆளுநர் சந்திப்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  மேலும் இரவு ஏழு மணியளவில் ஆளுநர் கேரளம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய முன்னேற்றமாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றி […]

Read More

கனகர் கிராமத்தில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது

பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்ற மக்களுக்கான பொதுக் கிணறு ஒன்றை அமைக்கும் பணியில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் பூர்த்தியாகாத நிலையில் முக்கியமாக நீருக்கான தட்டுப்பாடு பிரதானமாக காணப்பட்டது. அதனை நிவர்த்திக்கும் வகையில் கனகர் கிராம மக்கள் பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அங்கு மக்களுக்கு பெரிதும் […]

Read More

சமூக செயற்பாட்டாளர் விசு கனடா BRAC அமைப்பில் இணைப்பு

( வி.ரி. சகாதேவராஜா)  பிரபல சமூக செயற்பாட்டாளரும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவருமான  விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை  BRAC அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான குழுவில்  இணைக்கப்பட்டுள்ளார் என BRAC தலைவர் குரியன் பிரக்கணம் அறிவித்துள்ளார். திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவராக அறியப்படுகிறார்.  தனது சமூகத்தில் உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும் அவர், சமூக ஒற்றுமை, மக்கள் பங்கேற்பு மற்றும் […]

Read More

கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு!

( காரைதீவு  வேதசகா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர். இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார். […]

Read More

46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் -10.05.2026

( வி.ரி. சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு  10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி […]

Read More