சாய்ந்தமருது நகர சபை விவகாரம்;ஏ.எல்.எம். சலீம் அவர்களுடன் மறுமலர்ச்சி மன்றம் சந்திப்பு.!
✍️அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் தொடர்பாகமுன்னாள் பிரதேச செயலாளரும் ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் அவர்களை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ. அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி சட்ட வலுவானது என்றும் அதன்படி சாய்ந்தமருது நகர சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வட்டாரப் பிரிப்புக்கான எல்லை நிர்ணயத்தை […]