Blog Post

Kalmunai Net > 2026 > June

கோலாகலமாக பெரியநீலாவணையில் கலாசார மையம் திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

செல்லையா பேரின்பராசா.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியநீலாவணையில் பதினொரு மில்லியன் ரூபாவில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 19.06.2026 கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்.சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் […]

Read More

அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்த ராஜதந்திர மோதல்: ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!

​வாஷிங்டன், ஜூன் 19, 2026: ​அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), இஸ்ரேலிய அமைச்சரவைக்குக் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார். ​ஒப்பந்தம் ஏன் விமர்சிக்கப்படுகிறது? ஈரானின் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இது இஸ்ரேலின் தேசிய […]

Read More

சிறப்புக்கட்டுரை – சம்மாந்துறை நீச்சல் தடாகம் மூடப்பட்டது; இளைஞர் எதிர்காலம் கேள்விக்குறியா? மின்மினி மின்ஹா)

(கட்டுரை – மின்மினி மின்ஹா) ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப் பார்ப்பது போதுமானது. அந்த வகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்குள் அமைந்துள்ள நீச்சல் தடாகம், இன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பயிற்சி மையமாகவும், குடும்பங்களின் ஓய்வு நேரச் […]

Read More

நாளை (20) இ.கி.மிசன் மட்டு.மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளை 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்நிகழ்வில், மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு பயணத்தையும் அதன் கல்வி மற்றும் சமூக சேவைகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் கடந்த […]

Read More

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவ பெருவிழா – 2026

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவப் பெருவிழா 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகள்: 🔸 கொடியேற்றம்: 2026.06.17 (புதன்கிழமை)🔸 தீர்த்தோற்சவம்: 2026.06.22 (திங்கட்கிழமை) விழா நிகழ்ச்சிகள்: 🔹 2026.06.16 முதல் 2026.06.22 வரை தினமும் விசேட பூஜைகள், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா இடம்பெறும்.🔹 விழா நாட்களில் தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு அருளுரை நிகழ்ச்சியும் பகல் […]

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வாயிற் கோபுர திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், பாண்டிருப்பு ஆலயத்தின் புதிய வாயிற் கோபுர திறப்பு விழா இன்று (2026.06.18) வியாழக்கிழமை மிகச் சிறப்பாகவும் பக்தி உணர்வுடன் கூடிய சூழலிலும் நடைபெற்றது. காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரையான சுப நேரத்தில் கோபுர தரிசன நிகழ்வும், அதனைத் தொடர்ந்து கோபுர கும்பாபிஷேக நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ்விழாவிற்கு ஆலயத்தின் தலைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்றார். ஆன்மிக அதிதிகளாக பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதம […]

Read More

கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டு மையம் திறப்பு விழா (19) நாளை- கிழக்கு ஆளுநர் பிரதம அதிதி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம்’ திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை 19 ஜூன் 2026 மாலை 4:30 மணிக்கு பெரியநீலாவணை, மத்திய வீதியில் அமைந்துள்ள குறித்த மையத்தில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார் அவர்கள் தலைமைதாங்கவுள்ள இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர […]

Read More

சுற்றுலா மேம்பாட்டு நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்கள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Basil Rajapaksa பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) Colombo Fort Magistrate’s Court கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read More

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய  மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள்  நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து  மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த […]

Read More

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Read More