Blog Post

Kalmunai Net > 2026 > June

எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி மற்றும் தேசிய கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையால் […]

Read More

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரின் வர்த்தக கேந்திர மையமாக கருதப்படுகின்ற பொதுச் சந்தைத் தொகுதி வியாழக்கிழமை விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாக மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொழில்நுட்ப […]

Read More

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு – இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளும் அதனுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் வரவேற்பு காணப்படுகிறது. குறித்த விசாரணைகளுக்கு சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டக்ஙளை செய்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீர்கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

15 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி: மல்வத்தை விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்!

(வி.ரி. சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம் (AusKar – ஒஸ்கார்) தனது தொடர்ச்சியான சமூகப் பணித் திட்டங்களின் ஒரு பகுதியாக, சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலானந்த மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்காக ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது. கல்வி, விளையாட்டு, சமூக நலன் மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகிய துறைகளில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஒஸ்கார் அமைப்பு, தாயகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு […]

Read More

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கோடைக்கு பின்னர்     கன மழை , சுழல்  காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் நீண்ட  தொடர்  கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுழல்  காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. மேலும் இன்று(11) மாலை  பல்வேறு இடங்களில் குறித்த  மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சிறு  சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி ,சாய்ந்தமருது,பாண்டிருப்பு,கல்முனை ,நாவிதன்வெளி,மருதமுனை,பெரியநீலாவணை ,மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் […]

Read More

கல்முனை பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான ‘அடிப்படை உயிர்காப்பு’ மற்றும் ‘முதலுதவி’ (Basic Life Support – BLS & First Aid) பயிற்சி நிகழ்ச்சி அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் […]

Read More

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி: மாணவர்கள் சமூகத்திற்கு அறிவை எடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனை மற்றும் தலைமையில், 2026 ஜூன் 10 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் முதலுதவி வழங்குதல் தொடர்பான ஒருநாள் பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் இணைந்து உதவி பிரதேச செயலாளர் P. பிரணவரூபன், SRILANKA UNITES நிறுவனத்தின் முகாமையாளர் S. றுவுதரன், […]

Read More

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு- இருவர் கைது

பாறுக் ஷிஹான் டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(5) முதல் திங்கட்கிழமை(8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கையின் போது  தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை […]

Read More

மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று வலயம் முதல் இடம்

(ஷனா) கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று முதல் நிலை வலயமாக தெரிவாகியுள்ளது.அதேவேளை, மூன்று இடங்களைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், இரண்டு இடங்களைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் தலா ஒவ்வொரு இடங்களைப் பெற்று திருக்கோவில் மற்றும் கிண்ணியா கல்வி வலயங்கள் நான்காம் நிலையைப் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் 23ம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட […]

Read More

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13ஆம் திகதி ஆரம்பம்

மட்டக்களப்பு – களுதாவளையில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. உற்சவம் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. திருவிழா நாட்களில் கூட்டுப் பிரார்த்தனை, மேளவாத்தியக் கச்சேரி, சமய நிகழ்ச்சிகள், ஸ்தாபனாபிஷேகம், வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, ஜூன் […]

Read More